4 – 2 பாலனாய்

இரண்டாந் திருமொழி

(3242)

பாலனா யேழுல குண்டு பரிவின்றி,

ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,

தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே

மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.

விளக்க உரை

(3243)

வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,

கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,

நல்லடி மேலணி நாறு துழாயென்றே

சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே.

விளக்க உரை

(3244)

பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,

தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற

சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே

கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே.

விளக்க உரை

(3245)

கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,

பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,

பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே

ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே

விளக்க உரை

(3246)

தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்

கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,

தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே

நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே.

விளக்க உரை

(3247)

மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,

ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,

பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே

ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே

விளக்க உரை

(3248)

மடந்தையை வண்கம லத்திரு மாதினை,

தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,

வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்

மடங்குமால், வாணுத லீர்!என் மடக்கொம்பே.

விளக்க உரை

(3249)

கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்

அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,

வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்

நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்.

விளக்க உரை

(3250)

நங்கைமீர். நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்,

எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,

சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,

இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?

விளக்க உரை

(3251)

என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,

என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,

மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,

பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே.

விளக்க உரை

(3252)

மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,

மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,

ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top