(3242)
பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.
பதவுரை
|
பாலன் ஆய் |
– |
சிறு குழவியாகி |
|
பரிவு இன்றி |
– |
அநாயாஸமாக |
|
ஏழ் உலகு உண்டு |
– |
ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து |
|
ஆல்இலை |
– |
ஆலந்தளிரிலே |
|
அன்னவசம் செய்யும் |
– |
நித்திரை செய்தருளின |
|
அண்ணலார் |
– |
ஸ்வாமியினுடைய |
|
தாள் இணை மேல் |
– |
உபய பாதங்களின் மீது |
|
அணி |
– |
சாத்தப்பெற்ற |
|
தண் அம் |
– |
குளிர்ந்தழகிய |
|
துழாய் என்றே |
– |
திருத்துழாய்மாலை யென்றே வாய் வெருவிக்கொண்டு |
|
வல் வினையேன் மட வல்லி |
– |
வலிய பாபத்தைப் பண்ணின என்னுடைய இளங்கொடி போன்ற மகள் |
|
மாலும் |
– |
வ்யாமோஹிக்கின்றாள்; |
|
ஆல் |
– |
அந்தோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பண்டு ஆவிலையில் பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேணுமென்று என் மகள் (பாரங்குசநாயகி) ஆசைப்படுகின்றாளென்று திருத்தாயார் கூறுகின்றான். இவ்வுலகமெல்லாம் பிரளய வெள்ளத்தில் அழுந்தி அழியப்புகுங்கால் எம்பெருமான் இவற்றையெல்லாம்; தனது திருவயிற்றிலே வைத்து ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்ததாக நூற்கொள்கை. அது என்றைக்கோ நடந்த விஷயம். அப்போது அந்த வடதனசாயிப் பெருமானுடைய தாளிணை மேலணிந்த தண்ணந்துழாய்மாலையை இப்போது என் மகன் அபேகூஷிக்கின்றாளேயென்கிறாள்.
பாலனாய் என்ற சொல்லாற்றலால் நம்பிள்ளை அருளிச் செய்தாவது-‘பருவம்நிரம்பின பின்பு லோகத்தை யெடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில் என் மகள் இப்பாடுபடாள் கிடீர்” என்பதற்காக. வயது சென்றவனாயிருந்து இவ்வருந்தொழில் செயதால் அவ்வளவாக ஈடுபடவேண்டியிராது; பச்சைப்பசுங் குழந்தையாயிருந்து கொண்டு செய்த செயலாகையாலே ஈடுபாடு மிக்கது போலும்.
“பாலனாயேழுலகுண்டு” என்ற சொற் சேர்க்கையில் ஒரு பொருளின்பம் காட்டுகிறார் நம் பிள்ளை; அதாவது-சிறு குழந்தைகளின் கையிலே எது கிடைத்தாலும் சடக்கென எடுத்து வாயிலே போட்டுக் கொள்வது இயல்லாதலால் ஆலிலைப் பாலகனும் ஏழுலகுண்டது புத்திபூர்வகமாகவன்று; பிள்ளைத்தனத்திற்கு ஏற்ப ‘இது ஸாத்மிக்கும், இது ஸாத்மியாது’ என்று அறியாதே உலகங்களை வாயிலிட்டுக்கொள்ள, ரக்ஷகனுடைய வியாபாரமாகையாலே இது ரக்ஷணமாய் முடிந்ததாம்.
பரிவுஇன்றி ஸ்ர= பரிவாவது வருத்தம்; சிறிதும் ஆயாளமில்லாமையால் மிக எளிதாகச் செய்தமை சொன்னபடி.
அன்னவசம் செய்யும்=வயிற்றினுள் அன்னம் சென்றவாறே பரவசமாகக் கண்ணுறங்கிப்போவது உலகவியற்கையாதலால் நித்திரைக்கு அன்னவசம் என்று பெயரிடப்படுகின்றது போலும். எம்பெருமானும் ஏழுலங்களையுண்டதனால் உடனே நித்திரையுண்டாகத் தட்டில்லையே.
இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“(அன்னவசம் செய்யும்) தன் வசமாகவன்றிக்கே அஹமந்தம் என்கிற அன்னத்துக்கு வசமாக.” என்பதாம். முக்தி தசையில் அஹமந்தம் என்று சொல்லுகிறவர்கள் சேதநர்கள்; அவர்களெல்லாரும் பிரளய காலத்தில் திருவயிற்றினுள்ளடங்கி மெய்யாகவே அன்னமாக ஆய்விட்டபடியை அழகாக அருளிச்செய்தபடி.
அண்ணலார் தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றேஸ்ர= “தோளிணை மேலும் நன்மார்பில் மேலும் சுடர்முடி மேலும் தாளிணை மேலும் புணைந்த தண்ணந்துழாயுடையம் துழாய்மாலை அணிவது உண்டாகிலும் அடியே பிடித்து அடியை விடாதவிவளுக்குத் தாளிணைமேலணி தண்ணந்துழாயலொழிய வேறொன்றிலும் நெஞ்சு செல்லாதாகையாலே அதனiயே வாய் வெருவுகிறபடி.
தண்ணந்துழாயென்றேஸ்ர= ‘பாலனாய் ஏழுலகுண்டதும் ஆலிலை யன்னவசஞ் செய்ததும் எப்போதோ கழிந்ததாயிற்றே! அப்போதணிந்த திருத்துழாய்மாலை இப்போது கிடைக்க வழி யில்லையே!’ என்று எவ்வளவு சொன்னாலும் கேளாமல் மீண்டும் மீண்டும் அதனையே வாய்வெருவுகின்றாளென்றபடி.
என்றேமாலுமால்= திருத்துழாய் திருத்துழாயென்று வாய் வெருவுவதோடு நிற்கவில்லையே! உள்ளமும் குலையாநின்றாளே! என்;கிறாள். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்!-“மணிப்ரபையிலே அக்நிபுத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேணுமோ?” என்பதாம். உலகத்தில் மணி யொளியிலே சிலர்க்கு நெருப்பு என்கிற ப்ரமம் உண்டாகலாம்; இங்ஙனமே ப்ரமம் உண்டானதற்காக அவ்வஸ்துவானது அக்நியின் கார்யமான சுடுகையைப் பண்ணமாட்டாது; சுடுமாகில் ஆச்சரியப்படவேண்டியதேயாகும். அதுபோல இங்குங் காண்க: ஆலிலையன்ன வசஞ்செய்யு மண்ணலாருடைய தாளிணை மேலணிதண்ணந்துழாய்மாலை யென்பது இப்போது இல்லாத வஸ்துவே: அதனை வாயாற் சொல்வது ப்ரமத்தின் காரியமாக இருக்கட்டும்; ‘மாலுமால்’ என்னும்படி வியாமோஹமும் உண்டாகிறதே! என்ன ஆச்சரியமிது; என்றபடி.
English Translation
Alas, My frail daughter swoons, asking for the cool Tulasi from the feet of the Lord, -who swallowed the seven worlds with ease, and slept as a child on a fig leaf.
