1 – 2 வாலி மாவலத்து

இரண்டாந் திருமொழி

(958)

வாலிமாவலத் தொருவனதுடல்கெட வரிசிலை வளைவித்து அன்று

ஏலநாறுதண்  தடம்பொழி லிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,

ஆலிமாமுகி லதிர்தர அருவரை அகடுறமுகடேறி,

பீலிமாமயில் நடஞ்செயும்தடஞ் சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே.

விளக்க உரை

(959)

கலங்கமாக் கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணைகட்டி,

இலங்கைமா நகர்ப்பொடிசெய்த வடிகள்தாம் இருந்தநல்லிமயத்து,

விலங்கல்போல் வனவிற லிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர,

பிலங்கொள் வாளெயிற்றரிய வைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே.

விளக்க உரை

(960)

துடிகொள்  நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து ஆயர்

இடிகொள்  வெங்குரலின விடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து,

கடிகொள் வேங்கையின்நறு மலரமளியின்மணியறை மிசைவேழம்,

பிடியினோடு வண்டிசைசொலத்துயில் கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே.

விளக்க உரை

(961)

மறங்கொளாளரி யுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்

திறந்து வானவர்மணி முடிபணிதர இருந்தநல்லிமயத்துள்,

இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திட க்கிடந்தரு கெரிவீசும்,

பிறங்குமாமணி யருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே.

விளக்க உரை

(962)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,

அரைசெய் மேகலையலர் மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,

வரைசெய் மாக்களிறீள வெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து,

பிரசவாரி தன்னிளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே.

விளக்க உரை

(963)

பணங்களாயிர முடையநல்ல வரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,

இணங்கிவான வர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,

மணங்கொள் மாதவிநெடுங் கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,

பிணங்குபூம் பொழில்நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடைநெஞ்சே!

விளக்க உரை

(964)

கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி,

போர்கொள் வேங்கைகள்புன வரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,

ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,

பேர்களாயிரம் பரவிநின்றடி தொழும் பிரிதிசென்றடைநெஞ்சே.

விளக்க உரை

(965)

இரவுகூர்ந் திருள்பெரு கியவரைமுழை இரும்பசியதுகூர,

அரவமா விக்குமகன் பொழில்தழுவிய அருவரையிமயத்து,

பரமனாதி யெம்பனிமுகில் வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,

பிரமனோடு சென்றடிதொழும் பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.

விளக்க உரை

(966)

ஓதியாயிர நாமங்களு ணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,

ஏதமின்றி நின்றருளும்நம் பெருந்தகை இருந்தநல்லிமயத்து,

தாதுமல் கியபிண்டி விண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி,

பேதைவண்டு களெரியென வெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே.

விளக்க உரை

(967)

கரியமாமுகிற் படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று

பெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு பிரிதியெம்பெருமானை,

வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,

அரியவின் னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top