3 – 3 ஒழிவில் காலம்

மூன்றாந் திருமொழி

(3143)

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,

வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,

தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,

எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.

விளக்க உரை

(3144)

எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை, வானவர் வானவர் கோனொடும்,

சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,

அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.

விளக்க உரை

(3145)

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்

கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,

தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,

எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.

விளக்க உரை

(3146)

ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது

தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,

நீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்

பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

விளக்க உரை

(3147)

சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,

ஆதி மூர்த்தியென் றாலள வகுமோ?,

வேதி யர்முழு வேதத் தமுதத்தை,

தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே.

விளக்க உரை

(3148)

வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,

தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,

வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன

லாங்க டமை,அதுசுமந் தார்க்கட்கே.

விளக்க உரை

(3149)

சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,

அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,

நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,

சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.

விளக்க உரை

(3150)

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,

அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்

சென்று சேர்திரு வேங்கட மாமலை,

ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.

விளக்க உரை

(3151)

ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,

வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்

தாயன், நாண்மல ராமடித் தாமரை,

வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே.

விளக்க உரை

(3152)

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,

எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,

பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,

மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே.

விளக்க உரை

(3153)

தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,

நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,

கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top