1 – 8 தொடர் சங்கிலிகை

எட்டாந் திருமொழி

(86)

தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப

படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்

உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க

தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(87)

செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல

நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக

அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(88)

மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய்

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்

மின்னில் பொலிந்த தோர்கார் முகில்போலக் கழுத்திணில் காறை யொடும்

தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(89)

கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து

முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன்

தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(90)

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட

பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்

பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப் பலதே வனென்னும்

தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான் தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(91)

ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த

இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து

பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து

கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(92)

படர்பங் கயமலர் வாய் நெகிழப் பனிபடு சிறுதுளிபோல்

இடங்கொண் டசெவ் வாயூறி யூறி இற்றிற்று வீழநின்று

கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென

தடந்தா ளினைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(93)

பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய

அக்கு வடமிழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர

மக்க ளுலகினில் பெய்தறி யாத மணிக்குழ வியுருவின்

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(94)

வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல்

தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறுபுகர் படவியர்த்து

ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து ஒன்றும் நோவாமே

தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(95)

திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல் செங்கண்மால் கேசவன்தன்

திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர

பெருநீர்த் திரையெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்தபலம்

தருநீர் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ.

விளக்க உரை

(96)

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை

தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை

வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்

மாயன் மணிவண் ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top