(94)

(94)

வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின்

கருங்கன்றுபோல் தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன்

சிறுபுகர் படவியர்த்து ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து

ஒன்றும் நோவாமே தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.

பதவுரை

திரிவிக்கிரமன்

(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி

வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு

மேலே போகட்டுக்கொண்டு
அளைந்தது

அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்

ஒரு கரிய குட்டியானை போல,
தெள் புழுதி

தெளிவான புழுதியிலே
ஆடி

விளையாடி
சிறு புகர் பட

சிறிது காந்தி உண்டாக வேர்த்துப்போய்,
வியர்த்து

வேர்த்துப்போய்,
போது

உரியகாலத்திலே
அலர்

மலர்ந்த
ஒள்

அழகிய
கமலம்

தாமரைப்பூவை ஒத்த
சிறு கால்

சிறியபாதங்கள்
உறைத்து

(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே

சிறிதும் நோவாதபடி
தண்போது கொண்ட

குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது

மெத்தையின்மேலே
தளர்நடை நடவானோ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-பரந்த திருவடிகளைக் கொண்டு உலக மூன்றையுமளந்த இவன் தனது சிறிய அடிகளைக்கொண்டு புஷ்ப மெத்தையின்மேல் காலுறுத்தாமல் மெல்ல நடக்கவேணும் என்கிறார்.  கருநிறமான கண்ணன் திருமேனியிற்படிந்த புழுதியில் வேர்வைநீர் அழகியதாய்க் காணப்படுதலால், ‘புழுதியாடிச் சிறு புகர்பட வியர்த்து’ எனப் பாராட்டிக் கூறினார்.  உரைத்து-உறைக்க; எச்சத்திரிபு.  வெண்புழுதி, தெண்புழுதி, ஒண்போது, தண்போது-பண்புத்தொகை.

English Translation

Like a baby elephant playing in white mud, Trivikrama playing in the dirt comes sweating in patches; lets he hurt his tender lotus feet when he steps on hard ground, may he come toddling on a bed of fresh blossoms.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top