(91)

(91)

ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த

இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து

பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து

கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.

பதவுரை

கரு கார் கடல்வண்ணன்

மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை

காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில்

ஒரு பாதத்திலே
சங்கு

சங்கமும்
ஒரு காலில்

மற்றொரு பாதத்தில்
சக்கரம்

சக்கரமும்
உள் அடி

பாதங்களின் உட்புறத்திலே
பொறித்து

ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த

பொருந்தியிருக்கப் பெற்ற
இருகாலும் கொண்டு

இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு

அடிவைத்த அவ்வவ்விடங்களிலே
எழுதினால் போல்

சித்திரித்ததுபோல
இலச்சினை பட

அடையாளமுண்டாம்படி
நடந்து

அடிவைத்து

(தனது வடிவழகைக் கண்டு)

பெருகாநின்ற

பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்

ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்

பின்னும்
பெய்து பெய்து

(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக்கொண்டு

தளர்நடை நடவானோ -.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரானாகிய பிள்ளைக்குப் புருஷோத்தம சிஹ்நமாகிய சங்கசக்ரரேகைகள் உள்ளங்காலிலிருத்தலால் அத்தாள்களை வைத்து நடக்குமிடமெல்லாம் சங்கசக்ரத்தி துருவங்களை யெழுதினாற் போலாகின்றனவென்பது – முன்னிரண்டடியின் கருத்து.  “கரு கார் கடல்” என்பதற்கு – கரிய பெரிய கடலென்றும், கறுத்துக் குளிர்ந்த கடலென்றும், காளமேகம் போலவும் கடல் போலவுமென்றும் பொருள் கொள்ளலாம்.  இலச்சினை – லஷணம்.  கண்ணன் மந்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாகையால், காமர்தாதையாயினான்.  இவ்வடைமொழியால், கண்ணபிரானது அழகின் மேன்மை தொனிக்கும்.  தாதை – ‘தாதா‘ என்னும் வடசொல் விகாரம்.

English Translation

The dark ocean-hued Lord, Kamadeva’s  father, with the sole of his one foot etched with the conch-symbol and the other with the discus-symbol, leaves imprints wherever he places his foot, sending waves of lasting joy that rise over and over again, Is he come toddling now?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top