(91)
ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து
பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.
பதவுரை
| கரு கார் கடல்வண்ணன் |
– |
மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும் |
| காமர் தாதை |
– |
காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,- |
| ஒரு காலில் |
– |
ஒரு பாதத்திலே |
| சங்கு |
– |
சங்கமும் |
| ஒரு காலில் |
– |
மற்றொரு பாதத்தில் |
| சக்கரம் |
– |
சக்கரமும் |
| உள் அடி |
– |
பாதங்களின் உட்புறத்திலே |
| பொறித்து |
– |
ரேகையின் வடிவத்தோடு கூடி |
| அமைந்த |
– |
பொருந்தியிருக்கப் பெற்ற |
| இருகாலும் கொண்டு |
– |
இரண்டு திருவடிகளினாலும் |
| அங்கு அங்கு |
– |
அடிவைத்த அவ்வவ்விடங்களிலே |
| எழுதினால் போல் |
– |
சித்திரித்ததுபோல |
| இலச்சினை பட |
– |
அடையாளமுண்டாம்படி |
| நடந்து |
– |
அடிவைத்து |
|
(தனது வடிவழகைக் கண்டு) |
||
| பெருகாநின்ற |
– |
பொங்குகிற |
| இன்பம் வெள்ளத்தின் மேல் |
– |
ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே |
| பி்ன்னையும் |
– |
பின்னும் |
| பெய்து பெய்து |
– |
(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக்கொண்டு |
|
தளர்நடை நடவானோ -. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணபிரானாகிய பிள்ளைக்குப் புருஷோத்தம சிஹ்நமாகிய சங்கசக்ரரேகைகள் உள்ளங்காலிலிருத்தலால் அத்தாள்களை வைத்து நடக்குமிடமெல்லாம் சங்கசக்ரத்தி துருவங்களை யெழுதினாற் போலாகின்றனவென்பது – முன்னிரண்டடியின் கருத்து. “கரு கார் கடல்” என்பதற்கு – கரிய பெரிய கடலென்றும், கறுத்துக் குளிர்ந்த கடலென்றும், காளமேகம் போலவும் கடல் போலவுமென்றும் பொருள் கொள்ளலாம். இலச்சினை – லஷணம். கண்ணன் மந்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாகையால், காமர்தாதையாயினான். இவ்வடைமொழியால், கண்ணபிரானது அழகின் மேன்மை தொனிக்கும். தாதை – ‘தாதா‘ என்னும் வடசொல் விகாரம்.
English Translation
The dark ocean-hued Lord, Kamadeva’s father, with the sole of his one foot etched with the conch-symbol and the other with the discus-symbol, leaves imprints wherever he places his foot, sending waves of lasting joy that rise over and over again, Is he come toddling now?
