1 – 6 பரிவதில்

ஆறாந் திருமொழி

(2954)

பரிவதி லீசனைப் பாடி

விரிவது மேவ லுறுவீர்

பிரிவகை யின்றிநன் னீர்தூய்

புரிவது வும்புகை பூவே.

விளக்க உரை

(2955)

மதுவார் தண்ணந் துழாயான்

முதுவே தமுதல் வனுக்கு

எதுவே தென்பணி என்னா

ததுவே யாட்செய்யு மீடே.

விளக்க உரை

(2956)

ஈடு மெடுப்புமி லீசன்

மாடு விடாதென் மனனே

பாடுமென் நாவலன் பாடல்

ஆடுமெ னங்கம ணங்கே.

விளக்க உரை

(2957)

அணங்கென ஆடுமெ னங்கம்

வணங்கி வழிபடு மீசன்

பிணங்கி யமரர் பிதற்றும்

குணங்கெழு கொள்கையி னானே.

விளக்க உரை

(2958)

கொள்கைகொ ளாமையி லாதான்

எள்கலி ராகமி லாதான்

விள்கைவிள் ளாமைவி ரும்பி

உள்கலந் தார்க்கோ ரமுதே.

விளக்க உரை

(2959)

அமுதம் அமரகட் கீந்த

நிமிர்சுட ராழி நெடுமால்

அமுதிலு மாற்ற இனியன்

நிமிர்திரை நீள்கட லானே.

விளக்க உரை

(2960)

நீள்கடல் சூழிலங் கைக்கோன்

தோள்கள் தலைதுணி செய்தான்

தாள்கள் தலையில் வணங்கி

நாள்கள் தலைக்க ழிமினே.

விளக்க உரை

(2961)

கழிமின்தொண் டீர்கள் கழித்துத்

தொழுமீன் அவனைத் தொழுதால்

வழிநின்ற வல்வினை மாள்வித்து

அழிவின்றி யாக்கம் தருமே.

விளக்க உரை

(2962)

தரும அரும்பய னாய

திருமக ளார்தனிக் கேள்வன்,

பெருமை யுடைய பிரானார்,

இருமை வினைகடி வாரே.

விளக்க உரை

(2963)

கடிவார் தீய வினைகள்

நொடியா ருமள வைக்கண்

கொடியா அடுபுள் ளுயர்த்த

வடிவார் மாதவ னாரே.

விளக்க உரை

(2964)

மாதவன் பால்சட கோபன்

தீதவ மின்றி யுரைத்த

ஏதமி லாயிரத் திப்பத்து

ஓதவல் லார்பிற வாரே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top