1 – 5 கலையும்

ஐந்தாந் திருமொழி
(988)

கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,

சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,

மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,

தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

(989)

கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,

உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,

இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,

தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

(990)

உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,

நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி

வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்

சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

 

(991)

ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,

தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான்,

பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற

தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

 

(992)

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்

விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்

கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்

தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

(993)

தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட

வாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை

ஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும் தாயான்

காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

(994)

ஏனோரஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை,

ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன்தானே யிருசுடராய்,

வானாய்த் தீயாய்மாருதமாய் மலையாயலை நீருலகனைத்தும்

தானாய் தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

(995)

வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து ஓர்

சந்தார் தலைகொண்டு லகேழும் திரியும் பெரியோந்தான்சென்று, என்

எந்தாய்! சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில் தந்தான்,

சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே!

விளக்க உரை

(996)

தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும்,

அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்,

வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய,

தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே.

விளக்க உரை

(997)

தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,

காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,

ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள,

பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே

.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top