(997)
தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை*
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை*
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள*
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே!
பதவுரை
| உலகத்து |
– |
இவ்வுலகத்திலே |
| அறிவு உடையார் ஆரார் |
– |
விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்) |
| அமரர் நல் நாடு அரசு ஆள |
– |
நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக |
| பேர்ஆயிரமும் ஓதுமின்கள் |
– |
(ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்: |
| அன்றி |
– |
அல்லது, |
| கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன் |
– |
மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் |
| தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை |
– |
ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளி
யிருக்கு மெம்பெருமான் விஷயமாக |
| ஒலி செய் |
– |
அருளிச்செய்த |
| தமிழ்மாலை இவையே |
– |
தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே |
| பிதற்றுமின் |
– |
வாய்வந்தபடி சொல்லுங்கள். |
#997
தாரா ஆரும் வயல் சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*
காரார் புறவின் மங்கை வேந்தன் * கலியன் ஒலி செய் தமிழ்மாலை **
ஆரார் உலகத்து அறிவு அடையார்* அமரர் நல் நாட்டு அரசு ஆளப்*
பேர் ஆயிரமும் ஓதுமின்கள் * அன்றி இவையே பிதற்றுமினே* —(1-5-10)
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
* * *- (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். வானவர் நாடாகிய ஸ்ரீவைகுண்டத்தை ஸ்வாதீநமாக ஆள வேணுமென்னும் விருப்பமுடையீர் ! ஸஹஸ்ரநாமங்களை ஓதினீர்களாகில் உங்களுடைய விருப்பம் நிறைவேறும்; முரட்டு ஸம்ஸ்க்ருத பாஷையிலே அமைந்துள்ள அவற்றை உருச்சொல்லித் தரித்து ஓத வல்லமையில்லையேல் எளிதான செந்தமிழிலமைந்த இந்தப் பாசுரங்களை ஓதுங்கள்; பேற்றில் குறையில்லை என்றாராயிற்று.
“அன்றியிவையே ஓதுமினே” என்னாமல் பிதற்றுமினே என்றருளிச்செய்தமையால், “சொல்லும் க்ரமமொழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது” (முமுக்ஷுப்படி.) என்றாற்போலே இப்பாசுரங்களை வாயில்வந்தபடி தப்புந்தவறுமாகச் சொன்னாலும் அமையும் என்ற தாயிற்று. … … … (10)
அடிவரவு:- கலை கடம் உலவு ஊரான் அடுத்து தாய் ஏனோர் வெந்தார் தொண்டு தாரா வாணிலா .
ஐந்தாந்திருமொழி உரை முற்றிற்று.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சாணம்.
English Translation
The dark-cloud-flavored Mangai’s King Kaliyan has sung these songs on the Lord who resides in Saligrama, surrounded by fields with water birds. O Wise people of the world! If you wish to rule the world of the eternals, chant the thousand names of the Lord. Or else, sing these songs like mad.
