இரண்டாம் திருவந்தாதி திருமொழி – 9

(2262)

பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், – கனவில்

மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே – மிகக்கண்டேன்

ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,

வான்திகழும் சோதி வடிவு.

விளக்க உரை

(2263)

வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்

படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், – அடிக்கோலி

ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,

கோலத்தா லில்லை குறை.

விளக்க உரை

(2264)

குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,

மறையாங் கெனவுரைத்த மாலை, – இறையேனும்

ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,

மாயன்கண் சென்ற வரம்.

விளக்க உரை

(2265)

வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,

உரம்கருதி மூர்க்கத் தவனை, – நரம்கலந்த

சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,

அங்கண்மா ஞாலத் தமுது.

விளக்க உரை

(2266)

அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,

அமுதன்று கொண்டுகந்தான் என்றும், – அமுதன்ன

சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,

நன்மாலை யேத்தி நவின்று.

விளக்க உரை

(2267)

நவின்று ரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே

பயின்றதனால் பெற்றபயன் என்கொல், – பயின்றார்தம்

மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்

எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?

விளக்க உரை

(2268)

இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்

சென்றாங் களந்த திருவடியை, – அன்று

கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,

திருக்கோட்டி எந்தை திறம்.

விளக்க உரை

(2269)

திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,

திறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச்

செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்

கடிநகர வாசற் கதவு.

விளக்க உரை

(2270)

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,

அதவிப்போர் யானை ஒசித்து, – பதவியாய்ப்

பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,

மாணியாய்க் கொண்டிலையே மண்.

விளக்க உரை

(2271)

மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,

விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, – நண்ணித்

திருமாலை செங்க ணெடியானை, எங்கள்

பெருமானைக் கைதொழுத பின்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top