திருவிருத்தம் திருமொழி – 1

(2478)

பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,

இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்

எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா

மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.

விளக்க உரை

(2479)

செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்

அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ

முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம்

தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே.

விளக்க உரை

(2480)

குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும்,

நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல்,

தண்ணந்துழாய் அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்

தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச கமே.

விளக்க உரை

(2481)

தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந்துழாய்க்

கினிநெஞ்ச மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே

முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப்

பனிநஞ்ச மாருத மே,எம்ம தாவி பனிப்பியல்வே?

விளக்க உரை

(2482)

பனிப்பியல் வாக வுடையதண் வாடை,இக் காலமிவ்வூர்

பனிப்பியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந்தண்ணந்துழாய்

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம்

பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே?

விளக்க உரை

(2483)

தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு,

கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக்

கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்

நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே.

விளக்க உரை

(2484)

ஞாலம் பனிப்பச் செரித்துநன் நீரிட்டுக் கால்சிதைந்து

நீலவல் லேறு பொராநின்ற வானமிது திருமால்

கோலம்சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங்

காலங்கொ லோவறி யேன்வினை யாட்டியேன் காண்கின்றவே.

விளக்க உரை

(2485)

காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள்

பாண்குன்ற நாடர் பயில்கின்றன,இதெல்லா மறிந்தோம்

மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்

சேண்குன்றம்  சென்றுபொருள்படைப் பான்கற்ற திண்ணனவே.

விளக்க உரை

(2486)

திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்விண் ணாடனைய

வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்இவையோ

கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி

வண்பூங் குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே.

விளக்க உரை

(2487)

மாயோன் வடதிருவேங் கடநாடவல் லிக்கொடிகாள்

நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரையீர் நுமது

வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும்

ஆயோ அடும்தொண்டை யோஅறை யோவி தறிவரிதே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top