இரண்டாம் திருவந்தாதி திருமொழி – 4

(2212)

பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,

குராநல் செழும்போது கொண்டு, – வராகத்

தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,

மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.

விளக்க உரை

(2213)

மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்

மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, – மகிழ்ந்த

தழலாழி சங்க மவைபாடி யாடும்,

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.

விளக்க உரை

(2214)

துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்

அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், – பணிந்ததுவும்

வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,

வாய்திறங்கள் சொல்லும் வகை.

விளக்க உரை

(2215)

வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,

புகையால் நறுமலாரால் முன்னே, – மிகவாய்ந்த

அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,

என்பாக்கி யத்தால் இனி.

விளக்க உரை

(2216)

இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,

இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், – இனிதென்று

காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல்,

சேமநீ ராகும் சிறிது.

விளக்க உரை

(2217)

சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,

அறியாரும் தாமறியா ராவர், – அறியாமை

மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,

எண்கொண்டேன் னெஞ்சே. இரு.

விளக்க உரை

(2218)

இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,

திருந்து திசைமுகனைத் தந்தாய், – பொருந்தியநின்

பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்

ஏதங்க ளெல்லா மெமக்கு.

விளக்க உரை

(2219)

எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,

தமக்கென்றும் சார்வ மறிந்து , – நமக்கென்றும்

மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்

ஓதுவதே நாவினா லோத்து.

விளக்க உரை

(2220)

ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,

உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை

வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்

சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.

விளக்க உரை

(2221)

சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்

நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த

ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத

போகத்தா லில்லை பொருள்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top