(360)
நாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்விருந் தோம்புவார்
தேவகாரியம் செய்துவேதம் பயின்றுவாழ்திருக் கோட்டியூர்
மூவர்காரிய மும்திருத்தும் முதல்வனைச்சிந்தி யாதஅப்
பாவகாரிக ளைப்படைத்தவன் எங்ஙனம்படைத் தான்கொலோ.
(361)
குற்றமின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனு கூலராய்
செற்றமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்
துற்றியேழுல குண்டதூமணி வண்ணன்தன்னைத் தொழாதவர்
பெற்றதாயர் வயிற்றினைப்பெரு நோய்செய்வான்பிறந் தார்களே.
(362)
வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள்
எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகி லாதுபோய்
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.
(363)
உரகமெல்லணை யான்கையில் உறை சங்கம்போல்மட வன்னங்கள்
நிரைகணம்பரந் தேறும்செங்கம லவயல்திருக் கோட்டியூர்
நரகநாசனை நாவிற்கொண்டழை யாதமானிட சாதியர்
பருகுநீரும் உடுக்குங்கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ.
(364)
ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர் சாடிப்போய்
தீமைசெய்துஇள வாளைகள்விளை யாடுநீர்த்திருக் கோட்டியூர்
நேமிசேர்தடங் கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடை பூமிபாரங்க
ளுண்ணும்சோற்றினை வாங்கிப்புல்லைத் திணிமினே.
(365)
பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்
ஏதமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்
நாதனைநர சிங்கனைநவின் றேத்துவார்க ளுழக்கிய
பாததூளி படுதலால்இவ் வுலகம்பாக்கியம் செய்ததே.
(366)
குருந்தமொன்றொசித் தானொடும்சென்று கூடியாடி விழாச்செய்து
திருந்துநான்மறை யோர்இராப்பகல் ஏத்திவாழ்திருக் கோட்டியூர்
கருந்தடமுகில் வண்ணனைக்கடைக் கொண்டுகைதொழும் பத்தர்கள்
இருந்தவூரி லிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய் தார்கொலோ.
(367)
நளிர்ந்தசீலன் நயாசல னபிமானதுங்கனை நாடொறும்
தெளிந்தசெல்வனைச் சேவகஙகொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்
விளைந்த்தானியமு மிராக்கர் மீதுகொள்ளகிலார்களே.
(368)
கொம்பினார்பொழில் வாய்குயிலினம் கோவிந்தன்குணம் பாடுசீர்
செம்பொனார்மதிள் சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர்
நம்பனைநர சிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான்தன சின்னங்கள்இவ ரிவரென்றுஆசைகள் தீர்வனே.
(369)
காசின்வாய்க்கரம் விற்கிலும்கர வாதுமாற்றிலி சோறிட்டு
தேசவார்த்தைப டைக்கும்வண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர்
கேசவாபுரு டோத்தமாகிளர் சோதியாய்குற ளாஎன்று பேசுவார்அடி
யார்கள்எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.
(370)
சீதநீர்புடை சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர்
ஆதியானடி யாரையும்அடி மையின்றித்திரி வாரையும்
கோதில்பட்டர் பிரான்குளிர்புது வைமன்விட்டு சித்தன்சொல்
ஏதமின்றிஉ ரைப்பவர் இருடீகேசனுக் காளரே.
