(367)
நளிர்ந்தசீலன் நயாசல னபிமானதுங்கனை நாடொறும்
தெளிந்தசெல்வனைச் சேவகஙகொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்
விளைந்த்தானியமு மிராக்கர் மீதுகொள்ளகிலார்களே.
பதவுரை
| நளிர்ந்த சீலன் |
– |
குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும் |
| நய அசலன் |
– |
நீதிநெறி தவறாதவரும் |
| அபிமான துங்கனை |
– |
இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும் |
| நாள்தொறும் தெளிந்த செல்வனை |
– |
நாடோறும் தெளிந்துவராநின்றுள்ள கைங்கர்யஸம்பத்தை யுடையவருமான செல்வநம்பியை |
| சேவகம் கொண்ட |
– |
அடிமை கொண்டவனாய் |
| செம் கண் மால் |
– |
செந்தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார்பக்கல்) மோஹமுடையனாய் |
| திருக்கோட்டியூர் |
– |
திருக்கோட்டியூரில் |
| குளிர்ந்து உறைகின்ற |
– |
திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய திருக் |
| கோவிந்தன் குணம் படுவார் |
– |
கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் |
| உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும் |
– |
எழுந்தருளியிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும் |
| இராக்கதர் |
– |
ராக்ஷஸர்கள் |
| மீது கொள்ள கிலார்கள் |
– |
அபஹரிக்க மாட்டார்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-“(நளிர்ந்த சீலன் இத்யாதி) “அவ்வமுக் கொன்றுமில்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கள், செல்வனைப்போலத் திருமாலே நானுமுனைக்குப்பழவடியேன்” என்ற அருளிச்செயல் இங்கு உணரத்தக்கது. நயாவலன் – வடசொல் தொடர்; நுயெ *** நீதிநெறியில் சலிப்பற்றவன். *** – ஸாத்விகாஹங்காரத்தாற் சிறந்தவன்.
சிறந்தகுணகணங்க ளமைந்த செல்வநம்பிக்யை அடிமை கொண்டருளின திருக்கோட்டியூ ரெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடும் ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளியிருக்கும் நாட்டில் விளையும் தாக்யங்களைக் கூட ராக்ஷஸர் அபஹரிக்கவல்லரல்லர்; தமக்கும் தம் பந்துக்களுக்குமாகச் சேமித்த தாந்யமாகிலன்றோ ராக்ஷஸர் அபஹரிக்கலாவது என்பது உள்ளுறை. தானியம் – ***ம். தானியமும் என்ற உம்மை – இழிவுசிறப்பும்மை; வருத்தமின்றிக் கொள்ளைகொள்ளுகைக்குப் பாங்காக வயல்களில் விளைந்துள்ள தாந்யத்தையே கொள்ளைகொள்ளமாட்டாத அரக்கர், மற்றவற்றைக் கொள்ளையிட எங்ஙனே வல்லவராவர்? என்பது ஆராயத்தக்கது.
English Translation
The red-eyed-Lord Senkanmal of Tirukkottiyur engage the genteel, just and respectable Selvanambi in his service; he lives amidst devotees who sing Govinda’s names. Even Rakshasas will not steal their paddy.
