(3495)
துவளில் மாமணி மாட மோங்கு தொலைவில் லிமங்க லம்தொழும்
இவளை, நீரினி யன்னை மீர்! உமக் காசை யில்லை விடுமினோ,
தவள வொண்சங்கு சக்க ரமென்றும் தாம ரைத்தடங் கணென்றும்,
குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.
(3496)
குமிறு மோசை விழவொ லித்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
அமுத மென்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,
திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரானென்றே,
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே.
(3497)
கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
உரைகொ ளின்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,
திரைகொள் பெளவத்து சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி யளந்ததும்,
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே.
(3498)
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந் தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே.
(3499)
குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட் பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும் அத்தி சையுற்று நோக்கியே.
(3500)
நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு செந்நெ லோங்குசெந் தாமரை,
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வந்தொ லைவில்லி மங்கலம்,
நோக்கு மேல்அத் திசையல் லால்மறு நோக்கி லள்வைகல் நாள்டொறும்,
வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன் நாம மேயிவள் அன்னைமீர்.
(3501)
அன்னைமீர்!அணிமாமயில் சிறுமானி வள்நம்மைக் கைவலிந்து,
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லி மங்கலம் என்றல்லால்,
முன்னம் நோற்ற விதிகொ லோமுகில் வண்ணன் மாயங்கொ லோ,அவன்
சின்னமும்திருநாம முமிவள் வாயனகள் திருந்தவே.
(3502)
திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம்,மலிந்,
திருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம்,
கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,
இருந்தி ருந்துதரவிந்த லோசன! என்றேன் றேநைந்தி ரங்குமே.
(3503)
இரங்கிநாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள் கண்ணநீர்கள் அலமர,
மரங்க ளுமிரங் குவகை மணிவண்ணவோ. என்று கூவுமால்,
துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை வில்லி மங்கல மென்று ,தன்
கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு நாமங் கற்றதற் பின்னையே.
(3504)
பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.
(3505)
சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே,
தந்தை தாயென் றடைந்த வண்குரு கூர வர்சட கோபன்சொல்,
முந்தை யாயிரத் துள்ளி வைதொலை வில்லி மங்கலத் தைச்சொன்ன,
செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை செய் வார்திரு மாலுக்கே.
