(3502)

(3502)

திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம்,மலிந்,

திருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம்,

கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,

இருந்தி ருந்துதரவிந்த லோசன! என்றேன் றேநைந்தி ரங்குமே.

பதவுரை

அன்னைமீர்

தாய்மார்களே!
திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம்

பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை
மலிந்து இருந்து வாழ்

நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய்
பொருநல் வடகரை

தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய்
வண்

தர்சநீயமான
தொலைவில்லிமங்கலம்

தொலைவில்லித் திருப்பதியை
கரு தட கண்ணி

கறுத்துப்பெருத்த கண்களைடையளான இப்பெண்பிள்ளை
கை தொழுத அ நாள் தொடங்கி இ நாள் தோறும்

அஞ்ஜலிபண்ணினவன்று தொடங்கி இன்று வரையிலும்
இருந்து இருந்து

இடையிடையே ஏங்கியேங்கியிருந்து
அரவிந்த லோசன என்று என்றே

தாமரைக் கண்ணனை பலகாலு மழைத்து
நைந்து இரங்கும்

பலபடியாலும் சிதிலையாக நின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (திருந்து வேதமும்) துலைவில்லித் திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற அந்நாள் தொடங்கி இப்பெண்பிள்ளை அத்தலத்து எம்பெருமானது கண்ணழகிலேயே யீடுபட்டுத் தளராநின்றாளென்கிறது. வேதபாராயணங்களும் யஜஞயாகங்களும் ஸம்ருத்தமாய் ஸ்ரீதேவி பூதேவிகளோடே எழுந்தருளியிருக்கப்பெற்ற திருப்பதியென்று தலத்தின் மகிமை கூறுவன முன்னடிகள்.

திருந்து வேதம் – ஸ்வரவர்ணக்ரமங்கள் ஒன்றும் பிறழாமே எப்போதும் எவ்விடத்தும் ஒழுங்குபட விளங்கப்பெற்ற வேதம் என்றபடி. வேள்வி – அந்த வேதங்களில் ஓதப்பட்ட பகவதாராதந க்ரியா கலாபங்கள். திருந்து வேதமும் வேள்வியும் மலிந்து வாழ், திருமாமகளிரும் தாமும் இருந்துவாழ் என்று யோஜித்துக்கொள்ளலாம்.

கருந்தடங்கண்ணி – வெளிக்கண்ணின் அழகுசொன்னவிது ஸ்வாபதேசத்தில் உட்கண்ணின் அழகு சொன்னபடி. கரியகோலப்பிரானை விஷயீகரிக்கின்ற விசாலமான ஞானக்கண் படைத்தவர் ஆழ்வார் என்றபடி. இருந்திருந்து அரவிந்தலோசன வென்றென்றே – இங்கே ஈடு – “ஒருகால் அரவிந்தலோசன! என்னும்போது நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணும்“ என்று. அதாவது – திருநாமத்தைச் சொல்லவேணுமென்று தொடங்கும் போதே நைந்து உள்கரைந்து உருகுகிறபடியாலே நெடுகச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்கின்றமை சொன்னவாறு.

English Translation

The Lord lives in plenty on the Northern banks on Porunal, in prosperous Tulaivilli-Mangalam, amid Vedic chanters and Lakshmi-like ladies.  Since the day this dark-eyed fawn worshipped him there, everyday she says “Aravindalochana” patiently, then falls and weeps.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top