(2694)
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத்துழாய் தார் ஆர்ந்த மார்வன் தடமால் வரைபோலும்
போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலரி நீராமலர்க்கமலம் கொண்டொர் னெடுங்கையால்
நாராயணா வோ மணிவண்ணா நாகனையாய் வாராய். யென்னாரிடரை நீக்காய் – எனவெகுண்டு
(2695)
தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூறாக ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்பெருமான்
பேராயிரமுடயான் பேய்பெண்டீர் னும்மகளை தீராநோய் செய்தானெனவுரைதாள் சிக்கனுமற்று
(2696)
ஆரானும் அல்லாமை கேட்டங்கள் அம்மனையும் போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாய்
தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே — மற்று ஆரானுமல்லனே யென்றொழிந்தாள்
(2697)
நானவனைக் காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றத் திரிதருவன், பின்னையும்
(2698)
ஈராப்புகுதலும் இவ்வுடலைத் தன்வாடை சோராமருக்கும் வகையரியேன், சூழ் குழலார்
(2699)
ஆரானுமேசுவர் என்னு மதன்பழியெ வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன்
வாராய் மடனெஞ்சே வந்து, மணிவண்ணன்
(2700)
சீரார் திடுத்துழாய் மாலை நமக்கருளி தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை
ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால் ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும்
போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்
வாராதே யென்னை மரந்ததுதான், வல்வினையேன்
(2701)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்றெனக் கிங்கு
(2702)
ஆராய்வாரில்லை அழல்வாய் மெழுகு போல் நீராய் உருகும் என்னாவி நெடுங்கண்கள்
(2703)
ஊரார் உறங்கிலும் தானுறங்க உத்தமந்தன் பேராயினவே பிதற்றுவன் பின்னையும்