போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலரி
நீராமலர்க்கமலம் கொண்டொர் னெடுங்கையால்
நாராயணா வோ மணிவண்ணா நாகனையாய்
வாராய். யென்னாரிடரை நீக்காய் – எனவெகுண்டு (2694)
தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூறாக
ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்பெருமான்
பேராயிரமுடயான் பேய்பெண்டீர் னும்மகளை
தீராநோய் செய்தானெனவுரைதாள் சிக்கனுமற்று (2695)
பதவுரை
|
தடம் மால் வரை போலும் போர் ஆணை |
– |
மிகப்பெரிய மலைபோன்ற மத்தகஜமானது |
|
பொய்கை வாய் கோள்பட்டு நின்று அலறி |
– |
நீர்நிலத்திலே முதலையின் வாயிலகப்பட்டு நின்று வருந்தி |
|
ஓர் நெடுகையால் நீர் ஆர் கமலம் மலர் கொண்டு |
– |
நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போதலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு |
|
ஓ நாராயணனே! நீலமணி வண்ணனே! சேஷயன்னே! வந்தருளவேணும, எனது பெருந்துக்கத்தைப் போக்கி யருளவேணும், என்று கூவ, (அக்கூக்குரலைக் கேட்டு) |
||
|
வெகுண்டு |
– |
(கஜேந்திர விரோதியின் மேல்) கோபித்து |
|
தீராத சீற்றத்தால் சென்று |
– |
அடங்காத அக்கோபத்தாடே (பொய்கைக்கரைக்கு) எழுந்தருளி |
|
இரண்டு கூறு ஆக ஈரா |
– |
(முதலயை) இருதுண்டமாகப் பிளந்து |
|
அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் |
– |
அந்தக் கஜேந்திரனுடைய துன்பத்தைப் போக்கடித்த எம்பெருமான் |
|
பேர் ஆயிரம் உடையான் |
– |
(இப்படிப்பட்ட அளவற்ற காரியங்களுக்கு வாசகமான) ஸஹஸ்ர நாமங்களை யுடையவன், (அவ்வெம்பெருமான் தான்) |
|
பேய் பெண்டீர்றும்மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தான் |
– |
அறிவு கெட்ட பெண்டுகளே! உங்கள் மகளுக்கு (இப்படிப்பட்ட) தீராத நோயை உண்டு பண்ணினான் காண்மின் என்று சொல்லிமுடித்தாள் (கட்டுவிச்சி) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நாராயணா ஓ-வாராய்“, -பெரியாழ்வார் திருமொழியில் “பதக முதலைவாய்ப்பட்ட களிறு, கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா வென்ன“ என்ற விடத்து வியாக்கியான மருளிச் செய்கின்ற மணவாளமாமுனிகள் – “நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய்“ என்று கூப்பிட்டானாக அருளிச்செய்தார் திருமங்கையாழ்வார், இவர் ‘என் கண்ணா கண்ணா‘ என்று கூப்பிட்டானாக அருளிச்செய்தார், ‘மூலமே‘ என்று கூப்பிட்டானாகப் பௌராணிகர் சொன்னார்கள், இவை, தன்னில் சேரும்படி என்னென்னில், மூலம் என்கிறவிடத்தில் அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்துக் கூப்பிட்டானாகையாலே அதுக்குப் பர்யாய சப்தங்களை யிட்டு ஆழ்வார்களருளிச் செய்தார்களாகையால் எல்லாம் தன்னில் சேரக் குறையில்லை“ என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கே அநுஸந்திக்கத்தகும்.
ஆரிடரை நீக்காய் –முதலைவாயிலகப்பட்டுப் படுகிற துக்கத்தை நீக்க வேண்டுகின்றானல்லன் கஜேந்திராழ்வான். கையில் பறித்து வைத்துக்கொண்டிருக்கிற செந்தாமரைப்பூ செவ்வியழிவதற்கு முன்னே எம்பெருமானது திருவடிகளில் சாத்தப் பெறவேணுமென்பதே அவனது அபிநிவேசமாதலால் அவ்வபிநிவேசம் நிறைவேறப்பெறாமையால் வந்த துக்கத்தை நீக்கச் சொல்லுகிறவித்தனை. இந்தவுடம்பைக் காப்பாற்றிக்கொள்ள நான் கரையவில்லை, கையிலுள்ள தாமரைப்பூவைத் திருவடிகளில் ஸமர்ப்பிக்க வேணுமே என்றே கரைகின்றே னென்றவாறு.
ஈரா –இறந்தகால வினையெச்சம், ஈர்ந்து என்றபடி. அதனை இடர் கடித்தான் – அந்த ஸ்ரீகஜேந்திராழ்வான் கையிலிருந்த தாமரைப்பூக்களைத் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பெற்றுக்கொண்டா னென்றபடி.
இப்படி சில திவ்ய சேஷ்டிதங்களைச் சொல்லி, இப்படிப்பட்ட பல்லாயிரம் திவ்ய சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திருநாமங்களையுடைய பெருமான் உங்கள் மகளை நோவுபடுத்தினவன் காண்மின் என்று கட்டுவிச்சி கூறித் தலைக்கட்டினாளாயிற்று. இந்நோய் தீருவதற்கு உபாயமென்னவென்று விசாரிக்கிறவர்களே. நோக்கித் “தீரா நோய் செய்தான்“ என்று சொல்லுகிறபடி பாருங்கள். வேறுவிதமான நோயாகிலன்றோ அது தீரவேணுமென்று அவர்கள் சிந்திப்பர்கள், ஸர்வேச்வரனடியான நோயென்று தெரிந்தவாறே அவர்கள் இந்நோய் தீராமல் நித்யமாய்ச் செல்லவேணும்‘ என்று மநோரதிப்பர்களாதலால் அவர்களது கருத்துக்கு இணங்கத் தீரா நோய் என்றாளென்க. தீராத நோயாவது பக்தி. இது ஆத்மாவுள்ளவரையில் தொடர்ந்து செல்லக்கடவது, ப்ராப்தி தசையிலும் அநுவர்த்திக்குமிறே (கட்டுவிச்சியின் பேச்சு முற்றிற்று, இனி பரகாலநாயகியின் நிர்வேதம்)
