1 – 10 கண்ணார்

பத்தாந் திருமொழி

(1038)

கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்,

திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்.,

விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய,

அண்ணா ! அடியேன் இடரைக்களையாயே.

விளக்க உரை

 

(1039)

இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர்

குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்!,

விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய,

அலங்கல்துளபமுடியாய்! அருளாயே!

விளக்க உரை

 

(1040)

நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு,

ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்!,

சீரார் திருவேங்கடமாமலைமேய,

ஆராவமுதே!அடியேற்கருளாயே!

விளக்க உரை

 

(1041)

உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,

கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,

விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய,

அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே!

விளக்க உரை

 

(1042)

தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி,

பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.,

சேணார் திருவேங்கடமாமலைமேய,

கோணாகணையாய! குறிக்கொள்ளெனைநீயே!

விளக்க உரை

 

(1043)

மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி,

தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன்,

மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய,

என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே!

விளக்க உரை

 

(1044)

மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த,

ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.,

தேனே. திருவேங்கடமாமலைமேய,

கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே.

விளக்க உரை

 

(1045)

சேயனணியன் எனசிந்தையுள்நின்ற

மாயன் மணிவாளொளி வெண்டரளங்கள்,

வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய,

ஆயனடியல்லது மற்றறையேனே.

விளக்க உரை

 

(1046)

வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,

நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,

சிந்தாமணியே திருவேங்கடம்மேய

எந்தாய்!,இனியானுன்னை யென்றும் விடேனே.

விளக்க உரை

 

(1047)

வில்லார்மலி வேங்கடமாமலைமேய,

மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை,

கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை,

வல்லாரவர் வானவராகுவர்த்தாமே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top