மூன்றாந் திருவந்தாதி திருமொழி – 3

(2302)

பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே

வாச மலர்த்துழாய் மாலையான், – தேசுடைய

சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ

வக்கரனைக் கொன்றான் வடிவு.

விளக்க உரை

(2303)

வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்

கடியார் மலர்தூவிக் காணும் – படியானை,

செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,

மெய்ம்மையே காண விரும்பு.

விளக்க உரை

(2304)

விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்

சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்

புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,

மனம்துழாய் மாலாய் வரும்.

விளக்க உரை

(2305)

வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,

நெருங்குதீ நீருருவு மானான், – பொருந்தும் சுடராழி

யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்

தொடராழி நெஞ்சே தொழுது.

விளக்க உரை

(2306)

தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,

முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, – விழுதுண்ட

வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்

சேயானை நெஞ்சே சிறந்து.

விளக்க உரை

(2307)

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,

நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும்,

வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,

தாம்கடவார் தண்டுழா யார்.

விளக்க உரை

(2308)

ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,

காரே மலிந்த கருங் கடலை,- நேரே

கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி

அடைந்தானை நாளும் அடைந்து.

விளக்க உரை

(2309)

அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று

மிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும்

ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்

பேய்ச்சிபா லுண்ட பிரான்.

விளக்க உரை

(2310)

பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,

ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த

இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,

தெருளா மொழியானைச் சேர்ந்து.

விளக்க உரை

(2311)

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்

நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த

மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,

இறைபாடி யாய இவை.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top