நான்முகன் திருவந்தாதி திருமொழி – 5

(2422)

காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,

ஓண விழவில் ஒலியதிர – பேணி

வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய்,

திருவேங் கடமதனைச் சென்று.

விளக்க உரை

(2423)

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,

நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்

கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,

அடிக்கமலம் இட்டேத்து மங்கு.

விளக்க உரை

(2424)

மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை

கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள்

சடையேற வைத்தானும் தாமரைமே லானும்

குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.

விளக்க உரை

(2425)

கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,

தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,

போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,

போம்குமர ருள்ளீர் புரிந்து.

விளக்க உரை

(2426)

புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,

பரிந்து படுகாடு நிற்ப – தெரிந்தெங்கும்

தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே

வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.

விளக்க உரை

(2427)

வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்

றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, – எப்பாடும்

வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,

நாடுவளைத் தாடுமேல் நன்று.

விளக்க உரை

(2428)

நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் ,

பொன்மணியும் முத்தமும் பூமரமும், – பன்மணிநீ

ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்

வேடு முடைவேங் கடம்.

விளக்க உரை

(2429)

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்

வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், – வேங்கடமே

தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு

வானவரைக் காப்பான் மலை.

விளக்க உரை

(2430)

மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,

தலையாமை தானொருகை பற்றி, – அலையாமல்

பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,

கூறுவதே யாவர்க்கும் கூற்று.

விளக்க உரை

(2431)

கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ

மாற்றமும் சாரா வகையறிந்தேன், – ஆற்றங்

கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்

உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top