இரண்டாம் திருவந்தாதி திருமொழி – 8

(2252)

இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்

றடங்கா ரொடுங்குவித்த தாழி, – விடங்காலும்

தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,

பூவா ரடிநிமிர்ந்த போது.

விளக்க உரை

(2253)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த

போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது

மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,

அணிவேங் கடவன்பே ராய்ந்து.

விளக்க உரை

(2254)

ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,

வாய்ந்த மலர்தூவி வைகலும், – ஏய்ந்த

பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்

இறைக்காட் படத்துணிந்த யான்.

விளக்க உரை

(2255)

யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,

யானே தவமுடையேன் எம்பெருமான், – யானே

இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,

பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

விளக்க உரை

(2256)

பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று ,

இருக ணிளமூங்கில் வாங்கி, – அருகிருந்த

தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,

வான்கலந்த வண்ணன் வரை

விளக்க உரை

(2257)

வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,

விரைப் பொலிந்த வெண்மல் லிகையும் – நிரைத்துக்கொண்டு

ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே

ஓதிப் பணிவ தூறும்.

விளக்க உரை

(2258)

உறுங்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன்நற் பாதம்,

உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், – உறுங்கண்டாய்

ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்ஞா றெப்பொழுதும்,

சாற்றி யுரைத்தல் தவம்.

விளக்க உரை

(2259)

தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி

நிவர்ந்தளப்ப நீட்டியபொற் பாதம், – சிவந்ததன்

கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்

பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின்.

விளக்க உரை

(2260)

பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்

முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் – சொல் நின்ற

தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த

நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்.

விளக்க உரை

(2261)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,

ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், – ஆர்ந்த

அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்

படிக்கோலம் கண்ட பகல்?

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top