(347)
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை
பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.
பதவுரை
|
எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும் |
||
| பெரு |
– |
பெருமை பொருந்தியவர்களுமான |
| தேவிமார் |
– |
தேவியானவர்கள் |
| எட்டு திசையும் |
– |
எட்டுத்திக்குகளிலும் |
| விட்டு விளங்க |
– |
மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே) |
| வீற்றிருந்த |
– |
பெருமை தோற்ற எழுந்தருளியிருந்த |
| விமலன் மலை |
– |
நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருயிருக்கிற) மலையானது; |
| பட்டி |
– |
வேண்டினபடி திரியும் மலையான |
| பிடிகள் |
– |
யானைப் பேடைகளானவை |
| மாலைவாய் |
– |
இரவிலே |
| பகடு |
– |
ஆண் யானை மேல் |
| உரிஞ்சி சென்று |
– |
ஸம்லேஷித்துப்போய் |
| தெட்டித்திளைக்கும் |
– |
அந்த ஸம்லேஷித்துப்போய் முற்றிக் களியாநிற்கும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்க்கதிரா மிரவியல் “பொல்லாடிவடைப் பெய்ச்சி துஞ்ச” என்ற பாட்டின் பின்னடிகளில் கூறப்பட்டுள்ள கதை. இப்பாட்டின் முன்னடிகளில் அடங்கியுள்ள தென்க தேவிமார் எட்டுத்திசையும் விட்டு விளங்க என்றது- பார்த்த பார்த்துவிடமெங்கும் தேவிமார் திரளின் பிரகாசமேயிருக்கையைக் கூறியவாறு.
பட்டிமேய்ந்து திரியும் பெட்டையானைகள் இராக்காலங்களில் தம் தம் களிறுகளோடு புணர்ந்து, அதனாலுண்டாகும் ரஸம் முற்றிக் களிக்குமிடமென்று மலையின் சிறப்பைக் கூறுவது , பின்னடி (பிடி – பெண்பானை; பகடு, களிறு – ஆண் யானை.)
English Translation
Countless hordes of beautiful dames from the eight Quarters cramp the hill where the pure Lord resides. That hill is Malirumsolai where elephant-cows move hordes rubbing their sides against their bull all night and fall into rapturous delight.
