(347)

(347)

எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை

பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலைவாய்த்

தெட்டித்திளைக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.

பதவுரை

எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்

பெரு

பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்

தேவியானவர்கள்
எட்டு திசையும்

எட்டுத்திக்குகளிலும்
விட்டு விளங்க

மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த

பெருமை தோற்ற எழுந்தருளியிருந்த
விமலன் மலை

நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருயிருக்கிற) மலையானது;
பட்டி

வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்

யானைப் பேடைகளானவை
மாலைவாய்

இரவிலே
பகடு

ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று

ஸம்லேஷித்துப்போய்
தெட்டித்திளைக்கும்

அந்த ஸம்லேஷித்துப்போய் முற்றிக் களியாநிற்கும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்க்கதிரா மிரவியல் “பொல்லாடிவடைப் பெய்ச்சி துஞ்ச” என்ற பாட்டின் பின்னடிகளில் கூறப்பட்டுள்ள கதை. இப்பாட்டின் முன்னடிகளில் அடங்கியுள்ள தென்க தேவிமார் எட்டுத்திசையும் விட்டு விளங்க என்றது- பார்த்த பார்த்துவிடமெங்கும் தேவிமார் திரளின் பிரகாசமேயிருக்கையைக் கூறியவாறு.

பட்டிமேய்ந்து திரியும் பெட்டையானைகள் இராக்காலங்களில் தம் தம் களிறுகளோடு புணர்ந்து, அதனாலுண்டாகும்  ரஸம் முற்றிக்  களிக்குமிடமென்று மலையின் சிறப்பைக் கூறுவது , பின்னடி (பிடி – பெண்பானை; பகடு, களிறு – ஆண் யானை.)

English Translation

Countless hordes of beautiful dames from the eight Quarters cramp the hill where the pure Lord resides. That hill is Malirumsolai where elephant-cows move hordes rubbing their sides against their bull all night and fall into rapturous delight.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top