(1040)
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு *
ஏரால மிளந்தளிர்மேல் துயிலெந்தாய்! *
சீரார் திருவேங்கட மாமலை மேய *
ஆராவமுதே! அடியேற் கருளாயே.
பதவுரை
நீர் ஆர் கடலும் | – | நீர் நிரம்பியிருக்கிற கடலையும் |
நிலனும் | – | பூமியையும் |
முழுது | – | மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி) |
உண்டு | – | அமுது செய்து |
ஏர் | – | அழகியதும் |
இள | – | இளையதுமான |
ஆலந்தளிர் மேல் | – | ஆலந்தளிரின் மேலே |
துயில் | – | திருக்கண்வளர்ந்தருளின |
எந்தாய் | – | ஸ்வாமியே!, |
சீர் ஆர் | – | சிறப்புப் பொருந்திய |
திருவேங்கடம் மா மலை மேய | – | திருமலையிலே எழுந்தருளியிருக்கிற |
ஆரா அமுதே | – | ஆராவமுதமான எம்பெருமானே! |
அடியேற்கு அருளாய் | – | அடியேன் மீது கிருபை செய்தருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1040:
நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு ,
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்!
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே! அடியேற்கு அருளாயே. [1-10-3]
* * *[நீரார்கடலும்.] மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக; பிரளய காலத்திலே கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்திட்டு இளையதொரு ஆலந்தளிரின் மேலே திருக்கண்வளர்ந்தருளின அகடி தகடநா ஸமர்த்தனான உனக்கு அரிதான காரியமும் உண்டோ ? எல்லாம் எளிதேகாண் என்பார் போல வடதள சாயி விருத்தாந்தத்தை ப்ரஸ்தாவிக்கிறார். அந்த சக்தி விசேஷ மெல்லாந் தோற்றத் திருமலையிலே ஸேவைஸாதிக்கின்ற என் ஆராவமுதமே! அருள் புரியாய் என்கிறார் …… … (3)
English Translation
Insatiable ambrosial Resident of the great and wealthy Venkatam hills! You swallowed the Earth, the ocean and all else, and slept as a child on a fig leaf! Pray grace me, your servant.
