(1039)
இலங்கைப் பதிக்கன் றிறையாய* அரக்கர்
குலம்கெட் டவர்மாளக் கொடிப்புள் திரித்தாய்! *
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய *
அலங்கல் துளப முடியாய்! அருளாயே! (2)
பதவுரை
அன்று | – | முற்காலத்தில் |
இலங்கை பதிக்கு | – | லங்காபுரிக்கு |
இறை ஆய | – | அரசர்களாயிருந்த |
அரக்கரவர் | – | (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள் |
குலம்கெட்டு மாள | – | கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக |
கொடி | – | (தனக்கு) த்வஜமான |
புள் | – | பெரிய திருவடியை |
திரித்தாய் | – | ஸஞ்சரிப்பித்தவனே!, |
விலங்கல் குடுமி | – | (மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய |
திருவேங்கடம் | – | திருமலையிலே |
மேய | – | மேவியிருப்பவனாய் |
துளபம் | – | திருத்துழாயினாலாகிய |
அலங்கல் | – | மாலையை |
முடியாய் | – | திருமுடியிலே அணிந்துள்ளவனே! |
அருளாய் | – | (அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1039:
இலங்கைப் பதிக்கு, அன்று, இறை ஆய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள, கொடிப் புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய்! அருளாயே. [1-10-2]
* * * –[இலங்கைப்பதிக்கு.] புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.
உத்தர ஸ்ரீராமாயணத்தில் ஏழாவது ஸர்க்கத்தில் மாலி முதலிய அரக்கர்களை முடித்தவரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது, கண்டு கொள்க. மாலியானவன் முதலில் பெரிய திருவடியை கதையாலே அடித்துத் துரத்திவிட்டானென்றும், பிறகு பெருமாள் அளவற்ற சீற்றங்கொண்டு அப்பெரிய திருவடியின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களத்திலே யெழுந்தருளித் திருவாழியைப் பிரயோகித்து வெற்றி பெற்றனன் என்று முணர்க. ‘இலங்கைப்பதிக்கென்று இறையாய ” என்ற பாடமும் பொருந்தும்.
“குலம் மாள” என்னாமல் ” குலம் கெட்டு மாள ” என்றதனால், பல அரக்கர்கள் மூலைக்கொருவராகச் சிதறி ஓடினார்களென்பதும் பலர் மாண்டொழிந்தனர் என்பதும் விளங்கும். விலங்கல் குடுமி = ”சேணுயர் வேங்கடம்” என்றாற் போலே திருமலையின் உயர்த்தியைச் சொல்லுகிறது இந்த விசேஷணம், வானத்தின்மீது ஸஞ்சரிக்கின்ற ஸுர்ய சந்திரர்கள் விலகிப்போகவேண்டும்படியான சிகரத்தையுடைய திருமலை என்கை. விலங்கல் என்று மலைக்கும் பேருண்டாகையாலே, குடுமி – சிகரத்தையுடைய, திருவேங்கடம் விலங்கல் – திருவேங்கடமலையிலே என்றும் உரைக்கலாமாயினும் அதுசிறவாது.
அலங்கல் துளபமுடியாய் அருளாய் = ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்கென்றே தனி மாலையிட்டிருக்கிற உனக்கு என்னுடைய விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய காரியமன்று; அருள் செய்ய வேண்டுமத்தனையென்கை . ….. ….. (2)
English Translation
O Lord wearing a beautiful Tulasi wreath! Resident of Venkatam hills whose peaks rise without a peer! You rode the Garuda bird to destroy the clannish Rakshasas who ruled the Lanka kingdom. Pray grace me.
