(1038)

(1038)

கண்ணார் கடல் சூழிலங்கைக் கிறைவன் தன் *

திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்! *

விண்ணோர் தொழும் வேங்கட மாமலைமேய *

அண்ணா ! அடியே னிடரைக் களையாயே.

பதவுரை

கண் ஆர் கடல் சூழ்

விசாலமான கடலாலே சூழப்பட்ட

இலங்ககைக்கு இறைவன் தன்

லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய

திண்ஆகம் பிளக்க

திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக

சரம்

அம்புகளை

செல உய்த்தாய்

செலுத்தினவனே!

விண்ணோர் தொழும்

(பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற

வேங்கடம் மாமலை

திருமலையிலே

மேய அண்ணா

எழுந்தருளி யிருக்கிற பெருமானே!

அடியேன் இடரை களையாய்

என் துன்பங்களை நீக்கியருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய  விளக்க உரை

#1038

கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்தன்

திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்!

விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய

அண்ணா ! அடியேன் இடரைக் களையாயே. [1-10-1]

 

        * * * –[கண்ணார்கடல் சூழ்.] மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை; அவனும் இவனும் ஒருவனேயென்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்காகவென்க. இராவணனாலே குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்களெல்லாரும் களித்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமானே! இவ்விருள் தருமாஞாலத்தில் இருப்பு-பெருந்துக்கம் என்றுணர்ந்த என்னுடைய இவ்விடரைப் போக்கியருளாய் என்கிறார்.

 

கண்ஆர்கடல் = வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்படி யான (அழகிய) கடல் என்று முரைக்கலாம். ….. …. ……. (1)

 

English Translation

O Elder, Resident of Venkatam hills where the celestials offer. Worship! You rained arrows and rent the mighty chest of the kirig of ocean-hemmed Lanka. Rid me, your servant, of my grief.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top