மூன்றாந் திருவந்தாதி திருமொழி – 7

(2342)

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,

இளங்குமரன் றன்விண் ணகர்.

விளக்க உரை

(2343)

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,

மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

விளக்க உரை

(2344)

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,

இரண்டுருவு மொன்றாய் இசைந்து.

விளக்க உரை

(2345)

இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,

பசைந்தங் கமுது படுப்ப, – அசைந்து

கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,

கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.

விளக்க உரை

(2346)

அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,

மங்க இரணியன தாகத்தை,- பொங்கி

அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,

கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.

விளக்க உரை

(2347)

காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,

ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, – வாய்ந்த

மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,

அதுகே டவர்க்கிறுதி ஆங்கே.

விளக்க உரை

(2348)

ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,

ஓங்கு கமலத்தி னொண்போது, – ஆங்கைத்

திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்

பகரு மதியென்றும் பார்த்து.

விளக்க உரை

(2349)

பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்

கடுவனெனப் பேர்ந்து, – கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.

விளக்க உரை

(2350)

வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்

கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற

நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,

பூண்டநா ளெல்லாம் புகும்.

விளக்க உரை

(2351)

புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி

உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்

விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,

கண்டு வணங்கும் களிறு.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top