திருவிருத்தம் திருமொழி – 2

(2488)

அரியன யாமின்று காண்கின்ற * கண்ணன் விண்ணனையாய்!

பெரியன காதம் பொருட்கோ பிரிவென * ஞாலமெய்தற்

குரியன வொண்முத்தும் பைம்பொன்னுமேந்தி யோரோகுடங்கைப்

பெரியன கெண்டைக்குலம் * இவையோ வந்து பேர்கின்றவே.

விளக்க உரை

(2489)

பேர்கின்றது மணிமாமை பிறங்கியள்ளற்பயலை *

ஊர்கின்றது கங்கு லூழிகளே * இதெல்லா மினவே

ஈர்கின்ற சக்கரத்தெம்பெருமான் கண்ணன் தண்ணந்துழாய்

சார்கின்ற நன்னெஞ்சினார் * தந்து போன தனிவளமே.

விளக்க உரை

(2490)

தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப்

பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும்

துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்

தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே.

விளக்க உரை

(2491)

ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ

பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே

சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர்

தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே.

விளக்க உரை

(2492)

கயலோ நுமகண்கள்? என்று களிறுவினவி நிற்றீர்,

அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த

புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்

பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே.

விளக்க உரை

(2493)

பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்

பலபல கூறிட்ட கூறாயி டும்,கண்ணன் விண்ணனையாய்

பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்

பலபல சூழ லுடைத்து,அம்ம! வாழியிப் பாயிருளே.

விளக்க உரை

(2494)

இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ

இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி தூரல், அரவ ணைமேல்

இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வதுபோல்

இருள்விரி சோதிப், பெருமா னுறையு மெறிகடலே.

விளக்க உரை

(2495)

கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று

கடல்கொண் டெழுந்த வதனா லிது,கண்ணன் மண்ணும்விண்ணும்

கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ லோபுயற் காலங்கொலோ

கடல்கொண்ட கண்ணீர் அருவிசெய் யாநிற்கும் காரிகையே.

விளக்க உரை

(2496)

காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே

மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ

சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார்

சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே.

விளக்க உரை

(2497)

சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம் – இந் நோயினதென்

றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது – வேல நில்நீ

என்மொழி கேண்மினென் அம்மனை மீர்உல கேழுமுண்டான்

சொல்மொழி, மாலயந் தண்ணந்து ழாய்கொண்டு சூட்டுமினே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top