மூன்றாந் திருவந்தாதி திருமொழி – 6

(2332)

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,

அவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே

கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,

இலங்கா புரமெரித்தான் எய்து.

விளக்க உரை

(2333)

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,

எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், – எய்ததுவும்

தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்

முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.

விளக்க உரை

(2334)

முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,

இயன்றமரத் தாலிலையின் மேலால், – பயின்றங்கோர்

மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,

தண்ணலங்கல் மாலையான் தாள்.

விளக்க உரை

(2335)

தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா

மருதிடைபோய்க் கேழலாய், – மீளாது

மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,

பெண்ணகலம் காதல் பெரிது.

விளக்க உரை

(2336)

பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,

கரிய முகிலிடைமின் போல, – தெரியுங்கால்

பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்

நீணெடுங்கண் காட்டும் நிறம்.

விளக்க உரை

(2337)

நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,

இறையுருவம் யாமறியோ மெண்ணில், – நிறைவுடைய

நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,

பூமங்கை கேள்வன் பொலிவு.

விளக்க உரை

(2338)

பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,

மலிந்து திருவிருந்த மார்வன், – பொலிந்து

கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,

தெருடன்மேல் கண்டாய் தெளி.

விளக்க உரை

(2339)

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,

அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய

வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்

மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.

விளக்க உரை

(2340)

வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,

தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்

திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்

பெருமான் அடிசேரப் பெற்று.

விளக்க உரை

(2341)

பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,

முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, – கற்றுக்

குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்

பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top