மூன்றாந் திருவந்தாதி திருமொழி – 10

(2372)

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,

வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்

கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,

வயிற்றினோ டாற்றா மகன்.

விளக்க உரை

(2373)

மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,

மகனா மவன்மகன்றன் காதல் – மகனை

சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே

நிறைசெய்தென் நெஞ்சே. நினை.

விளக்க உரை

(2374)

நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,

அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு

வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,

உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.

விளக்க உரை

(2375)

உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,

வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், – மெத்தெனவே

நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,

பொன்றாமை மாயன் புகுந்து,

விளக்க உரை

(2376)

புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்

இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்

சிந்தப் பிளந்த திருமால் திருவடியே

வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து.

விளக்க உரை

(2377)

வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்

தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, – கேழ்த்த

அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,

அடித்தா மரையாம் அலர்.

விளக்க உரை

(2378)

அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,

மலரெடுத்த மாமேனி மாயன், – அலரெடுத்த

வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்

கெண்ணத்தா னாமோ இமை.

விளக்க உரை

(2379)

இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,

அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், – நமஞ்சூழ்

நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,

துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.

விளக்க உரை

(2380)

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக்

கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்

தாள்முதலே நங்கட்குச் சார்வு.

விளக்க உரை

(2381)

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top