1 – 2 வண்ண மாடங்கள்

முதல் திருமொழி

(13)

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்

கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.

விளக்க உரை

(14)

ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்

நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்

பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று

ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.

விளக்க உரை

(15)

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்

காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்

ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு

வோணத் தானுல காளுமென் பார்களே.

விளக்க உரை

(16)

உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்

அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.

விளக்க உரை

(17)

கொண்ட தாளுறி கோலக் கொடுமழு

தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்

அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.

விளக்க உரை

(18)

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்

ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட

வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.

விளக்க உரை

(19)

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்

ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்

மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.

விளக்க உரை

(20)

பத்து நாளும் கடந்த இரண்டாநாள்

எத்தி சையும் சயமரம் கோடித்து

மத்த மாமலை தாங்கிய மைந்தனை

உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.

விளக்க உரை

(21)

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.

விளக்க உரை

(22)

செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை

மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப்

பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top