7 கருப்பூரம் நாறுமோ

(567)

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

விளக்க உரை

(568)

கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்

உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்

திடரில்கு டியேறித் தீயவ சுரர் நடலைப்ப

டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

விளக்க உரை

(569)

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்

இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே

விளக்க உரை

(570)

சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்

அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்

மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே

இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே

விளக்க உரை

(571)

உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை

இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்

மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு

முண்கின்றாய் பாஞ்சசன் னியமே

விளக்க உரை

(572)

போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்

சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு

சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய

வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே

விளக்க உரை

(573)

செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்

செங்கட்க ருமேனி வாசுதே வனுடய

அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்

சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே

விளக்க உரை

(574)

உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்

கண்படை கொள்ளில்க டல்வண்ணன் கைத்தலத்தே

பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்

பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே

விளக்க உரை

(575)

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்

வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே

விளக்க உரை

(576)

பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்

ஆய்ந்தேத்த வல்லா ரவரும ணுக்கரே

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top