(576)
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லா ரவரும ணுக்கரே
பதவுரை
| பாஞ்சசன்னியத்தை |
– |
சங்கை |
| பற்பநாபனோடும் |
– |
எம்பெருமானோடே |
| வாய்ந்த |
– |
பெருசுற்றம் ஆக்கிய |
|
கிட்டினபேருறவையுடையதாக வார்த்தை சொன்ன |
||
| வண் புதுவை |
– |
அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும் |
| ஏய்ந்த புகழ் |
– |
நிறைந்த புகழை யுடையவளும் |
| பட்டர்பிரான் கோதை |
– |
பெரியாழ்வாருடையடாள் (அருளிச்செய்த) |
| தமிழ் ஈர் ஐந்தும் |
– |
இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் |
| ஆய்ந்து |
– |
அநுஸந்தித்து |
| எந்த வல்லார் அவரும் |
– |
(இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும் |
| அணுக்கர் |
– |
(பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லி முடிக்கிறாள் இதில், ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நோக்கி “மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்“ என்றமையால் இச்சங்குதான் எம்பெருமானுக்குக் கிட்டின வுறவுடையது என்று ஆண்டாளுடைய கருத்தாயிருந்தது, அதுதோன்ற அருளிச்செய்கிறாள் – “பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனொடும் வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய“ என்று நெருங்கின பந்துத்வ முடையதாகக் கொண்டு சொன்ன என்றபடி. ஆக்கிய என்ற அடைமொழி கோதைக்குமாகலாம். கோதை தமிழ்க்குமாகலாம். “ஏய்ந்தபுகழ்“ என்ற அடைமொழி பட்டர்பிரானிடத்து அந்வயிக்கத்தகுமாயினும் கோதையிடத்து அந்வயித்தருளினர் பெரியவாச்சான்பிள்ளை. தமிழ் – தமிழாலாகிய பாசுரங்கட்டு ஆகுபெயர்.
ஆய்ந்து ஏத்தவல்லா ரவரும் – இத்திருவாய்மொழி முழுவதும் பாஞ்சஜந்யத்தைப் பற்றிச் சொல்லிற்றேயன்றி எம்பெருமானைப்பற்றி இதில் ஒன்றுமில்லையேயென்று கருதிவிடாமல் இதுவும் எம்பெருமானுடைய பெருமையில்தான் சென்று முடிகின்றதென்று ஆராய்ந்து அநுஸ்திக்கவல்லவர்கள் என்றபடி. எம்பெருமானுடைய திருவாயமுகத்தின் இனிமையும் அவனுடைய ஆச்ரிதபக்ஷபாதமும் இத்திருமொழியில் விளங்கக்காண்க. அணுக்கர் – அன்புடையார், அந்தரங்கர்.
English Translation
This decad of Tamil songs by Goda, daughter of the celebrated Pattarbiran of ancient Puduvai, unities a conch Panchajanya with the Lord Padmanabha in an exalted relationship. Those who sing it with feeling will become devotees of the Lord.
