(2873)

(2873)

சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்

பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்

ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய

கார்கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டுகொள்ளே.

 

பதவுரை

இராமநுசா

எம்பெருமானாரே!,

சீர் கொண்டு

சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்

பேர்அறம் செய்து

சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து

நுல் வீடு செறிதும் என்னும்

பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற

பார்கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன்

ப்ரஸித்தமான ப்ரபாவத்தையுடைய ப்ரபாவத்தையுடைய ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;

உன் பதயுகம் ஆம்

தேவரீருடைய உபய பாதங்களாகிற

ஏர் கொண்ட வீட்டை

பரம விலக்ஷணமான மோக்ஷத்தை

எளிதினில் எய்துவன்

ஸுலபமாக அடைந்திடுவேன்;

கார் கொண்ட

(ஔதார்யத்தில்) மேகத்தைவென்றிருக்கிற தேவரீருடைய

வண்மை இது

ஔதார்யம் இப்படிப்பட்டது;

கண்டுகொள்

தேவரீரே இதனைக்கண்டு கொள்ளலாம்.

(அடியேன் சொல்ல வேணுமோ?)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சரமச்லோகத்திலே கண்ணபிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால் நமக்கு மோக்ஷம் கைபுகுந்துவிட்ட தேயாமென்று அறுதியிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்; அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை. தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிறமனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.

 

English Translation

O Ramanuja! I am not one among the noble ones of the world who practise the exalted path of Bhakti-yoga and attain the perfect freedom of Maksha. Effortlessly, I will attain the great liberation of Vaikunta, through your dark-cloud-like benevolence, – just see!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top