(2873)
சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம்
ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார்கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டுகொள்ளே.
பதவுரை
|
இராமநுசா |
– |
எம்பெருமானாரே!, |
|
சீர் கொண்டு |
– |
சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய் |
|
பேர்அறம் செய்து |
– |
சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து |
|
நுல் வீடு செறிதும் என்னும் |
– |
பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற |
|
பார்கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் |
– |
ப்ரஸித்தமான ப்ரபாவத்தையுடைய ப்ரபாவத்தையுடைய ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்; |
|
உன் பதயுகம் ஆம் |
– |
தேவரீருடைய உபய பாதங்களாகிற |
|
ஏர் கொண்ட வீட்டை |
– |
பரம விலக்ஷணமான மோக்ஷத்தை |
|
எளிதினில் எய்துவன் |
– |
ஸுலபமாக அடைந்திடுவேன்; |
|
கார் கொண்ட |
– |
(ஔதார்யத்தில்) மேகத்தைவென்றிருக்கிற தேவரீருடைய |
|
வண்மை இது |
– |
ஔதார்யம் இப்படிப்பட்டது; |
|
கண்டுகொள் |
– |
தேவரீரே இதனைக்கண்டு கொள்ளலாம். |
|
(அடியேன் சொல்ல வேணுமோ?) |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சரமச்லோகத்திலே கண்ணபிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால் நமக்கு மோக்ஷம் கைபுகுந்துவிட்ட தேயாமென்று அறுதியிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்; அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை. தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிறமனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.
English Translation
O Ramanuja! I am not one among the noble ones of the world who practise the exalted path of Bhakti-yoga and attain the perfect freedom of Maksha. Effortlessly, I will attain the great liberation of Vaikunta, through your dark-cloud-like benevolence, – just see!
