(2874)

(2874)

கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே

தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்

விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று

உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.

 

பதவுரை

எம் இராமாநுசன் தன்னை

ஸ்வாமி எம்பெருமானாரை

இன்று கண்டு கொண்டேன்

இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;

காண்டலுமே

இப்படி தெரிந்து கொண்டவளலிலே

அவன் தொண்டர் பொன் தாளில்

அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில்

தொண்டு கொண்டேன்

அடிமைப்பட்டேன்; (அதனால்)

என் தொல்லை வெம் நோய்

எனது பழைய கொடு வினைகளை

விண்டு கொண்டேன்

நீக்கிக்கொண்டேன்,

அவன் சீர் வெள்ளம் வாரியை

அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை

வாய் மடுத்து உண்டு கொண்டேன்

வாயார அநுபவிக்கப் பெற்றேன்;

இன்னம் உற்றன

இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை

ஒதில்

சொல்லத்தொடங்கினால்

உலப்பு இல்லை

(அதுக்கு) ஒரு முடிவு கிடையாது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இனிமேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப்போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினாம் இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லையுண்டோ வென்றாராயிற்று.

 

English Translation

I have found my Ramanuja; by which act, I have become a servant of his devotees feet; by which process, I have cut as under my age-old karmic ills. Today I have drunk deep from the river of his glory-flood.  If I were to say more, there will be no end to it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top