(2874)
கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே
தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்
விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று
உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.
பதவுரை
|
எம் இராமாநுசன் தன்னை |
– |
ஸ்வாமி எம்பெருமானாரை |
|
இன்று கண்டு கொண்டேன் |
– |
இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்; |
|
காண்டலுமே |
– |
இப்படி தெரிந்து கொண்டவளலிலே |
|
அவன் தொண்டர் பொன் தாளில் |
– |
அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில் |
|
தொண்டு கொண்டேன் |
– |
அடிமைப்பட்டேன்; (அதனால்) |
|
என் தொல்லை வெம் நோய் |
– |
எனது பழைய கொடு வினைகளை |
|
விண்டு கொண்டேன் |
– |
நீக்கிக்கொண்டேன், |
|
அவன் சீர் வெள்ளம் வாரியை |
– |
அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை |
|
வாய் மடுத்து உண்டு கொண்டேன் |
– |
வாயார அநுபவிக்கப் பெற்றேன்; |
|
இன்னம் உற்றன |
– |
இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை |
|
ஒதில் |
– |
சொல்லத்தொடங்கினால் |
|
உலப்பு இல்லை |
– |
(அதுக்கு) ஒரு முடிவு கிடையாது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இனிமேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப்போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினாம் இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லையுண்டோ வென்றாராயிற்று.
English Translation
I have found my Ramanuja; by which act, I have become a servant of his devotees feet; by which process, I have cut as under my age-old karmic ills. Today I have drunk deep from the river of his glory-flood. If I were to say more, there will be no end to it.
