(2872)

(2872)

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீவினையால்

உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்

பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ!

தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே.

 

பதவுரை

தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது

தெளிவான ஞானத்தைச் சேரப்பெறாமல்

வெம் தீ வினையால்

மிகவுங் கொடிகான கருமத்தாலே

உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை

உபயோகமற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலையில்லாமல்) திரிகிற என்னை

ஒரு பொழுதில்

ஒரு க்ஷணகாலத்தில்

பொருவு  அற்ற கெள் வயன் ஆக்கி நின்றான்

ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கியருளினவரும்

தெரிவு உற்ற கீர்த்தி

ப்ரஸித்தமான புகழை யடையவரும்

சீர் முகில் என்னும்

(ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான

இராமாநுசன்

எம்பெருமானார்

என்ன புண்ணியனோ

என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)

 

English Translation

I was an ignorant one, without proper knowledge, roaming around with faulty understanding in a trice. Ramanuja made me a peerless learned one, and stood aside, while the world raved and said, “What a blessed one!”. He is famed for his benevolence that matches the raincloud.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top