(2871)

(2871)

சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்

சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன்செய்ய தாளிணைகள்

பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனியுன்

சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.

 

பதவுரை

உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி

தேவரீருடைய உபய பாதங்களின் கீழே

தொண்டுபட்டவர் பால்

சோராமல் அடிடைப்பட்டவர்கள் விஷயத்தில்

சார்வு இன்றி நின்ற எனக்கு

பொருத்தமில்லாமலிருந்த எனக்கு

இன்று

இன்றைத்தினத்தில்

அரங்கன் செய்ய தான் இணைகள்

பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடியினைகளே

பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா

ஒருகாலும்வுட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே!

இனி

இப்படியான பின்பு

தெரிவுறில்

ஆராயுமளவில்

உன்

தேவரீருடைய

சீர் ஒன்றிய கருணைக்கு

சிறந்த திருவருளுக்கு

மாறு இல்லை

ஒப்பு இல்லை

 

English Translation

O Ramnuja! I served the fireless devotees of your perfect feet. You gave me the red lotus feet of the lord of Arangam himself forever! I have nothing to give in return for your boundless compassion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top