(2871)
சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன்செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனியுன்
சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.
பதவுரை
|
உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி |
– |
தேவரீருடைய உபய பாதங்களின் கீழே |
|
தொண்டுபட்டவர் பால் |
– |
சோராமல் அடிடைப்பட்டவர்கள் விஷயத்தில் |
|
சார்வு இன்றி நின்ற எனக்கு |
– |
பொருத்தமில்லாமலிருந்த எனக்கு |
|
இன்று |
– |
இன்றைத்தினத்தில் |
|
அரங்கன் செய்ய தான் இணைகள் |
– |
பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடியினைகளே |
|
பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா |
– |
ஒருகாலும்வுட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே! |
|
இனி |
– |
இப்படியான பின்பு |
|
தெரிவுறில் |
– |
ஆராயுமளவில் |
|
உன் |
– |
தேவரீருடைய |
|
சீர் ஒன்றிய கருணைக்கு |
– |
சிறந்த திருவருளுக்கு |
|
மாறு இல்லை |
– |
ஒப்பு இல்லை |
English Translation
O Ramnuja! I served the fireless devotees of your perfect feet. You gave me the red lotus feet of the lord of Arangam himself forever! I have nothing to give in return for your boundless compassion.
