(2870)
நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப
வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே.
பதவுரை
|
நல்லார் பரவும் இராமாநுசன் |
– |
ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய |
|
திருநாமம் |
– |
திருநாமத்தை |
|
நம்ப வல்லார் திறத்தை |
– |
(தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்க வல்லவர்களுடைய படிகளே |
|
மறவாதவர்கள் எவர் |
– |
மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ, |
|
அவர்க்கே |
– |
அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே |
|
எல்லா இடத்திலும் |
– |
ஸகல தேசங்களிலும் |
|
என்றும் |
– |
ஸகல அவஸ்தைகளிலும் |
|
எததொழும்பும் |
– |
ஸகலவித கைங்கரியங்களையும் |
|
சொல்லால் மனத்தால் கருமத்தினால் |
– |
மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும் |
|
சோர்வு இன்றி செய்வன் |
– |
பிரியாதே யிருந்து செய்வேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தம்முடைய நிலைநின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில். ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமாநுஜ பக்தபக்தர்களுக்கே அடியேன் – ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக்கடவே னென்றாராயிற்று. தொழும்பு = அடிமை.
English Translation
To those who recall the good ones who praise Ramanuja and place their faith in his name alone –to them and them alone, I shall give my service in thought, word and deed without fatigue, at all times at all places, in all climes.
