(2870)

(2870)

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப

வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,அவர்க்கே

எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்

சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே.

 

பதவுரை

நல்லார் பரவும் இராமாநுசன்

ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய

திருநாமம்

திருநாமத்தை

நம்ப வல்லார் திறத்தை

(தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்க வல்லவர்களுடைய படிகளே

மறவாதவர்கள் எவர்

மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,

அவர்க்கே

அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே

எல்லா இடத்திலும்

ஸகல தேசங்களிலும்

என்றும்

ஸகல அவஸ்தைகளிலும்

எததொழும்பும்

ஸகலவித கைங்கரியங்களையும்

சொல்லால் மனத்தால் கருமத்தினால்

மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்

சோர்வு இன்றி செய்வன்

பிரியாதே யிருந்து செய்வேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய நிலைநின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில். ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமாநுஜ பக்தபக்தர்களுக்கே அடியேன் – ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக்கடவே னென்றாராயிற்று. தொழும்பு = அடிமை.

 

English Translation

To those who recall the good ones who praise Ramanuja and place their faith in his name alone –to them and them alone, I shall give my service in thought, word and deed without fatigue, at all times at all places, in all climes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top