(2853)

(2853)

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர்

அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச்

செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்

படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!

 

பதவுரை

அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர்

பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்

சிதைந்து ஒட

பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக

வந்து இப்படியை தொடரும்

இப்பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற

மிக்க பண்டிதன்

மஹாபண்டிதரான

இராமாநுச

எம்பெருமானாரே!,

பிடியை தொடரும் களிறு என்னயான்

யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண்யானை போல

யான்

அடியேன்

சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும்

ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்வாமி! யானையானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல்கொண்டு அதனையே பின்பிற்றித் திரிவதுபோல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத் தோடு அநுவர்த்தித்துச் செல்லும்படியாக அருள்புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.

 

English Translation

O Ramanuja, Great scholar! Those who swear by the heretic six schools of blinding thought run helter-skelter as you follow them on Earth! Bless that I may follow you radiant lotus feel like an elephant but follows a cow.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top