(2854)

(2854)

பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்

விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை

கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே

மண்டிவந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே.

 

பதவுரை

எங்கள் இராமநுச முனி வேழம்

எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்தகஜமானது.

மாறன்

நம்மாழ்வார்

பண்

இசைகளாலே

தரு

அருளிச்செய்த

பசுந்தமிழ் ஆனந்தம்

செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்

பாய்மதம் ஆய்விண்டிட

பெருகுமதநீராக ஒழுகப்பெற்று

மெய்ம்மைகொண்ட நல்வேதம் கொழு தண்டம் எந்தி

ஸத்தியவாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக்கொண்டு

குவலயத்தே

இப்பூமண்டலத்திலே

மணடி வந்து என்றது

உங்களுடைய பிழைப்பு

உங்கள் வாழ்வு அற்றது

உங்களுடைய பிழைப்பு போயிற்று

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குத்ஹிதவாகங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;

ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக்கொண்டு எதிரிட்டு வாராநின்றது; இதற்குத் தப்பிப்பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.

யானைக்கு மதநீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார். திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்தஸேமே இந்தகஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம். இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.

 

English Translation

O Polemics! Watch out! The rutted elephant called Ramanuja, -with the ichor of the sweet Pann-based Maran’s Tamil Tiruvaimoli and the hefty tusks of Vedic truths, -is running amuch everywhere.  Your lives are ended.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top