(2315)

(2315)

அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,

நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், – அன்று

கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்

கடந்தானை நெஞ்சமே காண்.

 

பதவுரை

நெஞ்சமே

மனமே!

அன்று

முன்பொரு காலத்தில்

நின்று

நின்றுகொண்டே

இவ்வுலகம்

இவ்வுலகங்களையெல்லாம்

அளந்த

அளந்ததனாலுண்டான

அசவே கொல்

சிரமத்தினாலேயோ

வேளுங்கை

திருவேளுக்கையிலே

இருந்து

வீற்றிருந்து

நீள் நகர் வாய்

(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்

அன்று

ஒரு காலத்தில் கிடந்தானை

பள்ளி கொண்டவனும்

கேடு இல் சீரானை

ஒரு காலு மழிவில்லாத திருக்குணங்களையுடையவனும்

முன்

முன்னொருகால் கம்ஸனை

கடந்தானை

கொண்டுறொழித்தவனுமான பெருமானை

காண்

ஸேவி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான் ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார். “நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில்கூட்டி உரைக்கப்பட்டது. நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம்.

அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம்.

“கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.

 

English Translation

Did your feet, -that stretched into the sky, -grow fired? O Heart! See, the Lord is sitting in Velukkai, and reclining in Venkai Contemplate him.  He is the kamsa-killer lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top