(2314)

(2314)

பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்

மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ

மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்

அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.

 

பதவுரை

மேல் ஒரு நாள்

முன்னொரு காலத்தில்

பாலகன் ஆய்

சிறு குழந்தை வடிவமுடையனாகி

ஆல் இலை மேல்

ஆலந்தளிரிலே

உலகு எல்லாம்

உலகங்களையெல்லா

பைய

மெல்ல

மெய்ம்மெயே

உண்மையாகவே

உண்டவனே

அமுதுசெய்து கிடந்தவனே!

மாலவனே

ஸர்வாதிகளே!

நீ

இப்படிப்பட்ட நீ,

அன்று

அன்றொருநாள்

மந்தரத்தால்

மந்தரமலையைக்கொண்டு

மா நீர கடல் கடைந்து

மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து

வான் அமுதம்

திவ்யமான அமிருதத்தை

அந்தரத்தார்க்கு

தேவர்களுக்கு

ஈந்தாய்

அளித்தாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அநிஷ்டங்களைத் தவிர்ப்பதும் இஷ்டங்களை அளிப்பதுமாகி ரக்ஷணத்தைச் செய்யவல்லவன் எம்பெருமானே என்கிறது. இதில் மூன்னடிகளால் அநிஷ்டத்தைத் தவிர்த்தமையும் பின்னடிகளால் இஷ்டங்களை அளித்தமையும் சொல்லிற்று. பிரளயம் கொள்ளை கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றில் வைத்தது – அநிஷ்ட நிவாரணம். மந்தரத்தால் கடல்கடைந்து வானவர்க்கு அமுதளித்தது இஸ்டப்ராபணம்.

 

English Translation

O True Lord! In the yore you swallowed all the worlds, then slept as a child on a floating fig leaf. O Adorable Lord! You churned the ocean with a mountain and gave ambrosia to the gods in the sky.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top