(2314)
பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.
பதவுரை
|
மேல் ஒரு நாள் |
– |
முன்னொரு காலத்தில் |
|
பாலகன் ஆய் |
– |
சிறு குழந்தை வடிவமுடையனாகி |
|
ஆல் இலை மேல் |
– |
ஆலந்தளிரிலே |
|
உலகு எல்லாம் |
– |
உலகங்களையெல்லா |
|
பைய |
– |
மெல்ல |
|
மெய்ம்மெயே |
– |
உண்மையாகவே |
|
உண்டவனே |
– |
அமுதுசெய்து கிடந்தவனே! |
|
மாலவனே |
– |
ஸர்வாதிகளே! |
|
நீ |
– |
இப்படிப்பட்ட நீ, |
|
அன்று |
– |
அன்றொருநாள் |
|
மந்தரத்தால் |
– |
மந்தரமலையைக்கொண்டு |
|
மா நீர கடல் கடைந்து |
– |
மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து |
|
வான் அமுதம் |
– |
திவ்யமான அமிருதத்தை |
|
அந்தரத்தார்க்கு |
– |
தேவர்களுக்கு |
|
ஈந்தாய் |
– |
அளித்தாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அநிஷ்டங்களைத் தவிர்ப்பதும் இஷ்டங்களை அளிப்பதுமாகி ரக்ஷணத்தைச் செய்யவல்லவன் எம்பெருமானே என்கிறது. இதில் மூன்னடிகளால் அநிஷ்டத்தைத் தவிர்த்தமையும் பின்னடிகளால் இஷ்டங்களை அளித்தமையும் சொல்லிற்று. பிரளயம் கொள்ளை கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றில் வைத்தது – அநிஷ்ட நிவாரணம். மந்தரத்தால் கடல்கடைந்து வானவர்க்கு அமுதளித்தது இஸ்டப்ராபணம்.
English Translation
O True Lord! In the yore you swallowed all the worlds, then slept as a child on a floating fig leaf. O Adorable Lord! You churned the ocean with a mountain and gave ambrosia to the gods in the sky.
