(2178)

(2178)

பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்

அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர்

அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,

புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.

பதவுரை

பிடிசேர் களிறு

பேடையோடு சேர்ந்து விஷயபோகபரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த

காத்தருளின
பேராளா

மஹாநுபாவனே!
பொடிசேர்

(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்

அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல்

ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த

(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்

ஜலமயமான
கங்கை என்னும் பேர்

கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்

சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து

உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள்  அன்றே

(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “ அறம்பாவ மென்றிரண்டு மாவான்” என்றருளிச் செய்ததற்கு விவரணம் போலும் இப்பாட்டு. புண்யமும் பாபமும் அவனிட்ட வழக்காயிருக்குமென்றிறே கீழ்ப்பாட்டிற்சொல்லிற்று; அப்படி எங்கே கண்டோமென்ன, இரண்டுக்கும் இரண்டு வ்ருத்தாந்தங்கள் காட்டுகிறாரிதில்; ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். அக்களிறு பூர்வஜந்மவாஸநையினால் பகவத்பக்தி மாறாதிருக்கப் பெற்றாலும் மற்றுள்ள காட்டானைகள் போலே விஷயப்ரவணமுமாய்த் திரிந்துக்கொண்டிருந்தமை பற்றிப் பிடிசேர்களிறு என்றார். [பிடி- யானையின்பேடை.] சாபத்தின் பலனாகப் பாபயோநியிற் பிறவிபெற்ற அவ்யானைக்கும் அருள் செய்யக் காண்கையாலே பாபம் அவனிட்ட வழகாயிருக்குமென்பது பெறப்பட்டது. பாபிஷ்டர்களையும் பரிசுத்தராக்குந் தன்மை கங்கைக்கு எம்பெருமானருளாலே வந்த தென்கையாலே புண்யம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது. “ஆனின் மேயவைந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ” [ சுத்தியை விளைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற ’பஞ்சகவ்யமும் பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது] என்றார் திருமழிசைப்பிரான்; ‘பஞ்சகவ்யம் பரிசுத்திகரமாகக் கடவது’ என்று ஸங்கல்பித்தது போலே ‘ கங்கை பரிசுத்திகரமாகக் கடவது’ என்றும் ஸக்கல்பித்து வைத்திருக்கையாலே புண்யம் நீயிட்ட வழக்கென்கிறது

English Translation

O Large-hearted Lord who saved the elephant in distress! The ash-ridden fire-wielding siva spills the Ganga-dame from his mat-hair.  Do you not bless her with purity by contact with your lotus feet of golden hue?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top