முதல் திருவந்தாதி திருமொழி – 10

(2172)

ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,

ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், – ஏனத்

துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,

மருவாதார்க் குண்டாமோ வான்.

விளக்க உரை

(2173)

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்

தேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்

மண்ணை உமிழ்ந்த வயிறு.

விளக்க உரை

(2174)

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச

எயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால்

பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்

சேவடிமே லீடழியச் செற்று.

விளக்க உரை

(2175)

செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,

மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்

மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,

இறையேனும் ஏத்தாதென் நா.

விளக்க உரை

(2176)

நாவாயி லுண்டே நமோநார ணா என்று,

ஓவா துரைக்கு முரையுண்டே, – மூவாத

மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்

தீக்கதிக்கட் செல்லும் திறம்.

விளக்க உரை

(2177)

திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,

அறம்பாவ மென்றிரண்டு மாவான், – புறந்தானிம்

மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,

கண்டாய் கடைக்கட் பிடி.

விளக்க உரை

(2178)

பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்

அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர்

அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,

புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.

விளக்க உரை

(2179)

பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,

நின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும்

இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்

ஒருவனங்கத் தென்று முளன்.

விளக்க உரை

(2180)

உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்

உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய்,

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,

உள்ளத்தி னுள்ளனென் றோர்.

விளக்க உரை

(2181)

ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,

ஈரடியும் காணலா மென்னெஞ்சே. – ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,

மாயவனை யேமனத்து வை.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top