(1748)

(1748)

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி

சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன்

அங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும்

செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

 

பதவுரை

வங்கம்

மரக்கலங்களை யுடைத்தாய்

மா

பெரிதான

முந்நீர்

(திருப்பாற்) கடலிலே,

வரி

பல கோடுகளையும்

நிறம்

அழகையுமுடைய

பெரிய

விசாலமான

வாள்

ஒளி பொருந்திய

அரவு

திருவனந்தாழ்வானாகிற

இன்

இனிமையான

அணை

படுக்கையிலே

மேவி

பொருந்தி வர்த்திப்பவனும்,

என் தலைவன்

எம்பெருமான் (எங்கு எழுந்தருளியிருக்கிறனென்றால்)

அங்கம் ஆறு

ஆறு வேதாங்கங்களென்ன

ஐந்து வேள்வி

பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன

நால் வேதம்

நான்கு வேதங்களென்ன

அரு கலை

(வேதங்களுக்கு உபப்ரும் ஹணமாகவுள்ள) அருமையான நூல்களென்ன ஆகிய இவற்றை

பயின்று

காலக்ஷேபமாகக் கொண்டு

எரி மூன்றும்

த்ரேதாக்நிகளை

செம் கையால் வளர்க்கும்

செவ்விய கைகளாலே ஓம்புகின்றவர்களும்

துளக்கம் இல் மனத்தோர்

நிலைநின்ற அத்யவஸாய முடையவர்களுமான அஅந்தணர்வாழ்கிற

திருக்கண்ணங்குடியுள்

திருக்கண்ணங்குடி யென்னுந் திருப்பதியிலே

நின்றான்

எழுந்தருளியிருக்கிறான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருப்பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொள்ளுகின்ற வ்யூஹமூர்த்தியே திருக்கண்ணங்குடியில் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியுள்ள எம்பெருமானென்கிறார்.

வங்கம் – கப்பல்; கடலுக்குச் சிறப்பாகக் கூறும விசேஷணமிது, இனி இச்சொல்லை வடசொல்லின் சிதைவாகக்கொண்டால் அலை என்று பொருள் கொள்ளலாம்.

அங்கம் ஆறு = சீக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு.  ஐந்துவேள்விகளாவன :– ப்ரஹ்மயஜ்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என்பனவாம்.  வேதமோதுதல் பிரமயஜ்ஞம்; பலியீதல் பூதயஜ்ஞம்; பித்ருக்களையுத்தேசித்துத் தர்ப்பணம்விடுதல் பித்ருயஜ்ஞம்; விருந்தினர்க்கு உணவளித்தல் மநுஷ்யயஜ்ஞம்.  நால்வேதமாவன :– ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்பன: தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் எனவிவை யென்றலுமுண்டு.  அருங்கலை யென்றது – வேதங்களுக்கு உபப்ரும்ஹணமாகவுள்ள ஸ்மிருதீதி ஹாஸ புராணங்களை யென்ப.  ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடையரான மஹான்கள் வாழுமிடம் திருக்கண்ணங்குடி யென்றதாயிற்று.

துளக்கமில்மனத்தோர் = துளக்கமாவது கலக்கம்; அஃதில்லாத மனமுடையவர்களென்றது நல்ல விவேகமுடையவர்களென்றபடி : ‘நாம் செய்கிற கருமங்கள் நமக்கு ஸாதநமல்ல; எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையே நமக்கு உஜ்ஜீவநோபாயம்’ என்னும் அத்யவஸாயத்தில் குலைதலற்றவர்களென்கை.

 

English Translation

Deep in the wide ocean, on a white serpent bed coil my Lord,- he is seen reclining, Bearing a white conch in hand and a beautiful lotus on navel of dark blue hue.  Pure-hearted Vedic seers worship his standing form chanting the Mantras of sacred works, -Six Angas, Five Prasnas, Four Vedas, -and feeding three altar fires in Tirukkannangudi.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top