(1747)
கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை
பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும்
அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே.
பதவுரை
|
கண்ட சீர் |
– |
கண்ணாலே ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடிய செல்வம் பொருந்திய |
|
கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்திலே |
|
உறை |
– |
நித்யவாஸஞ்செய்தருள்கின்ற |
|
அம்மானை |
– |
சௌரிப் பெருமான் விஷயமாக, |
|
சீர் கொண்ட |
– |
ஸ்ரீ வைஷ்ணவலக்ஷமி வாய்ந்த |
|
தொண்டன் |
– |
தாஸனான |
|
கலியன் |
– |
திருமங்கைமன்னன் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை |
– |
இப்பாமாலையை |
|
பண்டம் ஆய் |
– |
நிதியாகக் கொண்டு |
|
பாடும் |
– |
பாடவல்ல |
|
அடியவர்க்கு |
– |
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு |
|
எஞ்ஞான்றும் |
– |
எப்போதும் |
|
அண்டம் போய் ஆட்சி |
– |
பரமபதத்திலிருந்து கொண்டு வானகமாளப் பெறுவதாகும்; |
|
அவர்க்கு அது அறிந்தோம் |
– |
அவர்கட்கு அதுவே பேறு என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருக்கண்ணபுரத் தெம்பெருமான் விஷயமாகக் கலியன் சொன்ன இப்பாமாலையை நிதியாகக் கொண்டு பாடும் அடியவர்கட்குத் திருநாட்டுச் செல்வத்தை ஆளப்பெறுவதே பேறாகும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.
கண்டசீர்க்கண்ணபுரம் – பரமபதத்தின் சிறப்பை ஸ்ரீ வைகுண்டகத்யம் முதலான ஏட்டுப்புறங்களிலே காணலாமத்தனை யொழியக் கண்கொண்டு காண வொண்ணாது; அங்ஙனன்றியே திருக்கண்ணபுரத்தின் சிறப்பு ப்ரத்யக்ஷலக்ஷ்யமென்கை.
English Translation
This is a garland of sweet Tamil songs by dear-devoted kaliyan on the affluent Lord of kannapuram, Devotees who sing it with passion will rule over heaven, we know it.
